districts

img

நல்லாறு ஆனைமலை ஆறு திட்டத்தை துவங்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

பொள்ளாச்சி, ஜூலை 27- நல்லாறு ஆனைமலை ஆறு திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் பொள்ளாச்சி தாலுகா பேரவையில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.  தமிழ்நாடு விவசாயிகள்  சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா  அமைப்பு பேரவை கூட்டம் ஏடிசி தியேட்டர் அருகில் உள்ள  வங்கி ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் சனியன்று நடைபெற் றது.   இப்பேரவைக் கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் புளியம்பட்டி கிளைத் தலைவர் ஏ.அப்பாவு தலைமை  வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட் டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி  துவக்க உரையாற்றி னார்.  கோயம்புத்தூர் முதல் திண்டுக்கல் வரை செல்லும் தேசிய  நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயி களுக்கு சேவை சாலையை தரை மட்டத்தில் அமைத்து  தர வேண்டும். இல்லையென்றால் தேசிய நெடுஞ்சாலை யில் குடியேறும் போராட்டம் நடத்துவது, பொள்ளாச்சி முதல்  உடுமலை சாலையில் தேசிய நெடுஞ்சாலைதுறை சுங்கச்சாவ டியை அமைப்பதை கைவிட வேண்டும். நல்லாறு ஆனை மலை ஆறு திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவையில், பொள்ளாச்சி தாலுகா தலைவராக ஏ.ஈஸ்வ ரன், தாலுகாச் செயலாளராக ஸ்டாலின் பழனிச்சாமி, பொரு ளாளராக.வி.கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில  துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் நிறைவுரையாற்றி னார். இறுதியாக எ.கைலாச முருகன் நன்றி கூறினார். பொள் ளாச்சி தாலுகாவில் இருந்து திரளான விவசாயிகள் கலந்து  கொண்டனர்.