districts

தூய்மைப் பணியாளர்களின் உழைப்பை சுரண்டுவதா

ஈரோடு, அக்.12- தூய்மைப் பணியாளர்களின் உழைப்பை, ஈரோடு மாநகராட்சி கடுமையாக சுரண்டுவதாக சிஐடியு  குற்றம்சாட்டியுள்ளது.  இதுகுறித்து, சிஐடியு ஊரக மற் றும் நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர்  சங்கத்தின் தலைவர் எஸ்.சுப்ரமணி யன் தலைமையில் மாநகராட்சி  ஆணையாளரை சந்தித்து அளித்த  மனுவினை அளித்தனர். இது குறித்து அதில் தெரிவித்திருப்பதா வது, ஈரோடு மாநகராட்சியில் 60  வார்டுகளில், பொது சுகாதாரத் துறையில் நிரந்தரப்படுத்தப்பட்ட மற்றும் நிரந்தரப்படுத்தப்படாத தூய்மைப் பணியாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இதில், பொது  சுகாதாரப் பிரிவு மற்றும் இதரப்  பணிகள் தனியாரிடம் விடப்பட்டுள் ளது. இதில், தூய்மைப் பணியாளர் கள் மீதான பாரபட்சமான அணு குமுறைகள் நாளுக்கு நாள் கடுமை யாக அதிகரித்து வருகிறது. நிரந்த ரத் தொழிலாளர்களுக்கான ஊதி யம் கணக்கிடப்பட்டு வங்கியில் செலுத்தப்படுகிறது. இவ்வாறு வங் கியில் செலுத்தும்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் பெயர் மாற்றி வங்கிக் கணக்கில் அனுப்பி விடு கின்றனர். தொழிலாளி தனக்கு வர  வேண்டிய ஊதியத்தை பெறுவ தற்கு பல நாட்கள் காத்திருந்து தான்  பெற முடிகிறது. விடுப்பு நாட்கள்  இருப்பில் இருந்தாலும், விடுப் பிற்கு பதிலாக ஆப்சென்ட் போடப் படுகிறது. இதுவும் பணிப் பதிவேட் டில் பதிவாகி அவர்களது ஓய்வு கால பலன்களைப் பெறுவதில் சிர மங்களையும், கால தாமதத்தை யும் ஏற்படுத்துகிறது.  இலகுரக வாகனங்களில் வீடு களுக்குச் சென்று குப்பை வாங்கி  சேகரித்து கிடங்குக்கு கொண்டு செல்லும் பணிக்கு ஒரு வாகனத் திற்கு மாதம் ஆயிரம் ரூபாய் தொழி லாளர்களிடம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. ஆயிரம் ரூபாய் தர வில்லை எனில் சம்பந்தப்பட்ட தொழிலாளி வாகனத்திலிருந்து இறக்கி விடப்பட்டு சாக்கடை சுத்தம்  செய்தல், குப்பை அரைக்கும் பிரிவு  ஆகியவற்றிற்கு அனுப்பப்படு கிறார். வயது முதிர்ந்த தொழிலாளி களையும், பெண்களையும் உயர மான லாரிகளுக்கு (டிப்பர்) அனுப் பும் நிலைமை உள்ளது.  மேலும், தூய்மைப் பணியாளர் களுக்கு 5, 10 நிமிடங்கள் கால தாம தத்திற்குக் கூட ஆப்சென்ட் போடப் படுகிறது. இது தவறான அணுகு முறை ஆகும். காலை மணி 6.20  வரை பணிக்கு வருவதற்கு அனு மதி இருக்கிறது. அத்துடன் 10.30  மணிக்கோ, 2 மணிக்கோ அவர்க ளுக்கு பணி முடித்து அனுப்புவ தில்லை. ஒரு மணி நேரத்திற்கு  மேலாகக் கூட கால தாமதம் ஏற் படுகிறது. வாகனப் பராமரிப்பு,  எடை போடுதல் உள்ளிட்டவற் றிற்கு சொந்த பணத்தை செலவு  செய்ய வேண்டுமென்று கட்டாயப் படுத்தப்படுகின்றனர். இவை குறித்த புகாருக்கு, எந்த நடவ டிக்கையும் இல்லை. தீபாவளி பண்டிகைக்காக அவர்களது அக் டோபர் மாத ஊதியத்தை முன்ன தாக வழங்க வேண்டும். நிரந்தர மில்லாத பணியாளர்களுக்கும் சீருடை, காலுறை, கையுறை அவசி யம் கொடுக்க வேண்டும். வாகனங் கள் பற்றாக்குறை, குப்பை கொட் டும் இடத்தில் காய்கறிக் கழிவுகள்  கட்டாயம் கொடுக்க வேண்டும் என  கிலோ கணக்கில் இலக்கு வைப்பது  தவிர்க்கப்பட வேண்டும் என அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.