districts

img

சாக்கடைக்குள் மின் கம்பம்: சிஐடியு கேள்வி

திருப்பூர், செப். 15 – திருப்பூர் மாவட்டம், சங்கராமநல்லூர் பேரூராட்சி, ருத் திராபாளையம், புதுநகரம் பகுதியில் சாக்கடைக்குள் மின்  கம்பம் இருக்கும்படி கட்டுமானப் பணி மேற்கொண்டுள்ளனர். இப்பணியைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கச் செய லாளர் வலியுறுத்தி உள்ளார்.  சங்கராமநல்லூர் பேரூராட்சி, ருத்திராபாளையம் புதுநக ரம் பகுதியில் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. தெரு விளக்கு கம்பம் சாக்கடைக்குள் அமையும் வண்ணம் கட்டுமானப் பணி செய்யப்பட்டுள்ளது. அத்துடன்  சாக்கடை நடுவே மின் கம்பம் அமைவதால் சாக்கடைத் தண் ணீர் வெளியேறிச் செல்லாமல் தடுக்கப்படும் நிலையும் ஏற்பட் டுள்ளது. எனவே இப்பணியை மேற்பார்வையிடும் அதிகாரி மீது சங் கராமநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் உரிய நடவ டிக்கை எடுப்பதுடன், சாக்கடை அமைக்கும் பணியை முறை யாக செய்யாத காண்ட்ராக்டருக்கு வேறு பணிகளை வழங்கா மல் நிறுத்தி வைக்க வேண்டும். இப்பணிக்கு வழங்க வேண் டிய தொகையையும் நிறுத்தி வைக்க வேண்டும். மின் கம் பத்தை மாற்றி அமைத்து சாக்கடை கட்டுமானத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என்றும் சிஐடியு கட்டுமானத் தொழிலாளர்  சங்க ருத்திராபாளையம் கிளைச் செயலாளர் ஆர்.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

;