கோவை, ஜூலை 17- தமிழகத்தில் முதல் கட்டமாக 500 மின்சார பேருந்துகள் வாங்கி பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருவ தாக, போக்குவரத்து துறை அமைச் சர் சிவசங்கர் கோவையில் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழ்நாடு போக்குவரத்து கழ கம் கோவை மண்டலம் சார்பில் 20 புறநகர் பேருந்து மற்றும் ஓர் நகரப் பேருந்தை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதனன்று துவங்கி வைத்தார். புதிய பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் சிவசங்கர், போக்கு வரத்து கழக ஊழியர்களுடன் கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகளை கேட்டு அறிந் தார்.
இதனைத்தொடர்ந்து, செய்தி யாளரிடம் பேசிய அமைச்சர், தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத் தின் கீழ் இயங்கும் பழைய பேருந்து களை மாற்றி, புதிய பேருந்துகள் இயக்க முதல்வர் நிதி ஒதுக்கி, அவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இது மொத்தம் 7,200 புதிய பேருந்துகள் தமிழக அரசால் வாங்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது. மாநகரங்களில் தாழ் தள பேருந்துகள் இயங்குவதற்கு திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக சென்னையில் அடுத்த வாரம் அந்த பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. தொடர்ந்து கோவையி லும் தாழ் தள பேருந்துகள் இயக் கப்படும்.
மின்சாரத்தில் இயங்கும் 500 பேருந்துகள் வாங்குவதற்கான திட் டம் அறிவிக்கப்பட்டு, முதல் 100 பேருந்துகளுக்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது. சென்னை யில் மின்சார பேருந்துகள் இயக்கப் பட்ட பின், அடுத்து கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களிலும் இவை பயன்பாட்டிற்கு வரும். தமிழ கம் முழுவதும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து களிள் பயணிக்கும் வேகம் கூடியுள் ளதால், மாறி வருகின்ற தொழில் நுட்பத்திற்கு ஏற்ப, பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என் றார்.
தொடர்ந்து, கோவை மேட்டுப் பாளையம் சாலையில் அதிக விபத் துகள் நடப்பது குறித்த செய்தியா ளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், போக்குவரத்து துறை துணை ஆணையரைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகி றது. மினி பேருந்துகள் மீண்டும் இயக்குவது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டு வருவதாகவும், தேவைப்படும் பகுதிகளில் மினி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் புத னன்று தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் (கோவை) லிட் மற் றும் ஈரோடு மண்டலம் சார்பில் 15 புதிய பேருந்துகளின் இயக்கத் தினை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
இதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச் சர் சு.முத்துசாமி மற்றும் போக்கு வரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் கொடிய சைத்து புதிய பேருந்துகள் இயக் கத்தைத் தொடங்கி வைத்தனர். இதில், மாவட்ட ஆட்சியர் ராஜகோ பால் சுன்காரா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வ ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈ.வி.கே.ஸ்.இளங்கோவன் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாச லம் (அந்தியூர்), ஈரோடு நகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், உட்பட உள் ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற் றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விரைவில் பேச்சுவார்த்தை
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணி யிடங்களை மூன்று மாதங்களில் நிரப்பப்படும். ஊதியம் ஒப்பந்தம் குறித்த முன்று சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று 5 சதவிகிதம் ஊதிய உயர்வி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. புதிய மினி பேருந்துகள் இயக்குவது குறித்து மக்கள் கருத்து கேட்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் கருத்து குறித்து ஜூலை 22-ஆம் தேதி கூட்டம் நடைபெறுகிறது. அதற்கு பின்னர் முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று டெண்டர் விடப்பட்டு மினி பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு உள்ளதாக புகார் கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.