ஆனைமடுவு அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை!
சேலம், அக்.27- வாழப்பாடி அருகே உள்ள புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நிரம்பியதைத் தொடர்ந்து, உபரிநீர் திறக்கப்பட்டுள்ள தால், வசிஷ்டநதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச் சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதிதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால் 5,011 ஏக்கர் விளைநிலங்களும், பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும் பயனடைந்து வரு கின்றன. இந்தாண்டு பெய்த கோடை மழையில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து ஜூலை மாத இறுதியில் 25.75 அடியை எட்டியது. இதனையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் பெய்த பருவமழையால் ஆக.31 ஆம் தேதி அணையின் நீர் மட்டம் 45 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து அணையின் நீர்ப்பி டிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், நீர்வரத்து அதிக ரித்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, அக்.23 ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்தது. இந் நிலையில், எதிர்பாராத விதமாக கடந்த வியாழனன்று 4 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து வெள்ளியன்று காலை அணை யின் நீர்மட்டம் 65 அடியை எட்டியது. தொடர்ந்து சனி யன்று அதிகாலை அணையின் நீர்மட்டம் 65.29 அடியை எட்டி யது. இதனையடுத்து, அணையில் இருந்து வசிஷ்டநதியில் வினாடிக்கு 85 கன அடி தண்ணீர் உபரிநீராக திறக்கப்பட் டது. இதனால், அணைப்பாசன ஆயக்கட்டு பாசன விவசாயிக ளும், வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், வசிஷ்டநதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதால், ஆற்றுப்படுகை கரையோர கிராம மக்களுக்கு வாழப்பாடி வட்டாட்சியர் ஜெயந்தி உத்தர வின் பேரில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.
உடுமலை ஜி.டி.என்.மில்லில் 10.5 சதவிகிதம் போனஸ் உடன்பாடு
திருப்பூர், அக்.27- உடுமலை ஜி.டி.என். எண்டர்பிரைசஸ் மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 10.5 சதவிகிதம் போனஸ் வழங்குவதற்கு உடன்பாடு ஏற்பட்டது. உடுமலை ஜி.டி.என். எண்டர்பிரைசஸ் மில்லில் போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிஐடியு பஞ் சாலை தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் சி.ஈஸ்வரமூர்த்தி, மாவட்டச் செயலாளர் எம்.செல்வராஜ், மாவட்டப் பொருளாளர் எஸ்.ஜெயபிரகாஷ், கிளைத் தலை வர் நாகராஜ் ஆகியோரும், ஐஎன்டிவிசி மாநிலத் தலைவர் கோவை செல்வம், மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், கிளைத் தலை வர் சின்னதுரை, கிளைச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். தொழிற்சாலை நிர்வாகத் தரப்பில் ஜி.வி.பி. தினகரன், மனித வள மேலாளர் ராஜமணிக்கம், மேலாளர் சிவக்குமார், தொழிலாளர் நல அதிகாரி விஜயராகவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் நடப்பாண்டு தொழி லாளர்களுக்கு 10.5 சதவீதம் போனஸ் வழங்குவது என்று உடன்பாடு காணப்பட்டது. இதன்மூலம் மில்லில் வேலை செய்யும் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன டைவார்கள் என்று திருப்பூர் மாவட்ட சிஐடியு பஞ்சாலை தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சி.ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார்.
200 லிட்டர் ஊரல் அழிப்பு
சேலம், அக்.27- மேட்டூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளச் சாராய பேரல்களை காவல் துறையினர் அழித்தனர். சேலம் மாவட்டம், கொளத்தூர், மேட்டூர் பகுதிகளில் உள்ள சில கடைகளுக்கு, பாலமலையில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனைக்கு அனுப்புவதாக மேட்டூர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பால மலைக்கு மேட்டூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராமசந்திரன் தலைமையிலான குழுவினர் சென்றபோது, கருங்காட்டில் பாறை இடுக்குகளில் சாரா யம் காய்ச்சுவதற்கு தயாராக இருந்த கும்பல் தப்பியோடி யது. அங்கு பேரல்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 200 லிட்டர் ஊரல், கள்ளச்சாராயத்தை அழித்தனர். தமிழக - கர்நா டக எல்லையில் காவிரி கரையோரத்தில் திருவிழா காலங்க ளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது வழக்கமாக உள்ளதால், செட்டிப்பட்டி, கோட்டையூர், பாலாறு பகுதிகளிலும் மது விலக்கு சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திலிருந்து பரிசல்கள் மூலம் காவிரியில் கொளத் தூர் பகுதிக்கு விற்பனைக்கு கடத்தி வரப்படும் கள்ளச் சாராயத்தை பிடிக்கவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் விவசாயம் பாதிப்பு; மறியல்
நாமக்கல், அக்.27- சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதாகக்கூறி, விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள ரங்கம்பாளையத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலை ஒன்று, கடந்த 3 மாதங்க ளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து சுத்தி கரிப்பு செய்யாமல் கழிவுநீர், அருகிலுள்ள விவசாய காடுக ளில் குழாய் அமைத்து வெளியேற்றப்படுகிறது. மேலும், ஆழ்துளை கிணறு போடப்பட்டு கழிவுநீர் போருக்குள் விடப் படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீர் மாசடைந்து, தண்ணீரின் நிறம் மாறி வருகிறது. இந்த தண்ணீரை குடிநீருக் கும், விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாமல் பொதுமக் கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மண்ணின் தன்மை மாறி கருப்பு நிறங்களில் தெரிகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புளிப்பு வாசம் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து பலமுறை முறையிட்டு, ஆலை நிர்வாகம் மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. `இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள், கிராம மக்கள் ஆலை நிர்வாகத்திற்கு எதிராக உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பரமத்தி வேலூர் வட்டாட்சியர் முத்துகுமார், சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இதையடுத்து, ஆலைக்கு சென்று கழிவுநீர் வெளியேறும் பகுதியையும் ஆய்வு செய்த அவர், கழிவுநீரை விவசாய நிலத்தில் வெளி யேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆலை நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து மறி யலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
மருத்துவமனையில் ஓய்வெடுக்கும் தெருநாய்
உதகை, அக்.27- கோத்தகிரி அரசு மருத்துவமனைக்குள் தெருநாய் ஒன்று புகுந்தது அவசர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கை யில் படுத்து ஓய்வெடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங் களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியிலுள்ள அரசு மருத்துவ மனை, உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட சிறப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி நோயாளிகள் பிரிவில் தினமும் 300க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், சமீபத்தில்தான் ரூ.3 கோடியில் புதிய அவசர சிகிச்சை பிரிவு கட்டப்பட்டது. இந்நி லையில், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்குள் புகுந்த தெரு நாய் ஒன்று, அவசர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கை யில் படுத்து ஓய்வெடுத்தது. இதை அங்கு சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத் தில் பதிவிட்டார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோத்தகிரியில் அரசு மருத்துவமனை, வட்டாட் சியர் அலுவலகம் உள்ளிட்ட பொது இடங்களில் தெருநாய்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவுதான், தற் போது நோயாளிகளின் படுக்கையில் தெருநாய் படுத்து
6 அணைகளை புனரமைக்க ரூ.8.57 கோடி நிதி ஒதுக்கீடு
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
புதுக்கோட்டை, அக்.27 - புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 அணைக்கட்டுகளை புனரமைப்பு செய்வதற்கு ரூ.8.57 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளதால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்னியாறு, தெற்கு வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகள் உள்ளன. இந்த ஆறு களில் மழைக் காலத்தில் மட்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆறு களில் பல்வேறு இடங்களில் உள்ள அணைக்கட்டுகளின் மூலம் ஏரி, கண்மாய்களுக்கு தண்ணீர் திருப்பி பாசனம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அவ்வப்போது ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வந்தாலும் கூட அணைக்கட்டுகள் முறையாக பரா மரிக்கப்படாமல் இருந்தன. இதனால் தண்ணீரை பகிர்ந்து பயன்படுத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இதையடுத்து, அணைக்கட்டுகளை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் மாவட்டத்தில் 6 அணைக்கட்டுகளை புனரமைக்க ரூ.8.57 கோடியையும், ஒரு குளத்தை புனரமைக்க ரூ.96.99 லட்சத்தையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், “கறம் பக்குடி அருகே மானிய வயலில் அக்னியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள அணைக்கட்டு பழுதடைந்து உள்ளது. இதைப் புனரமைக்க ரூ.95.66 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரிமளத்தில் உள்ள கூடலூர் அணைக்கட்டில் வலது மதகை பழுது பார்த்து, பாதுகாப்புச் சுவரைப் புதுப்பிக்க ரூ.1.48 கோடியும், பெருமரு தூரில் உள்ள மணலூர் அணைக்கட்டை புனரமைக்க ரூ.96.37 லட்சமும், அறந் தாங்கி அருகே புதுவாக்கோட்டை அணைக்கட்டை புனரமைக்க ரூ.1.44 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. திருமயம் அருகே கும்மங்குடியில் உள்ள அணைக்கட்டை புனரமைக்க ரூ.1.20 கோடியும், கடையக்குடியில் உள்ள ஹோல்ஸ்வொர்த் அணைக் கட்டு மற்றும் அதில் உள்ள திருகு பல கைகளை புதுப்பிக்க ரூ.2.51 கோடி என மொத்தம் 6 அணைக்கட்டுகளை புன ரமைக்க ரூ.8.57 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. மேலும், ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடியில் உள்ள பெரிய குளத்தை புனரமைக்க ரூ.96.99 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் தெற்கு வெள்ளாறு வடி நிலக் கோட்டத்தின் மூலம் மேற்கொள் ளப்பட உள்ளன. இப்பணிகள் விரை வில் தொடங்கும்” என்றார்.