குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு - அவதி
சேலம், அக்.12- சேலம் மேட்டூரில் கூட்டு குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள் ளதால் மக்கள் குடிநீர் இல்லாமல் அவதிக்கு உள்ளாகி யுள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூர் காவிரியிலிருந்து காடை யாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு காவிரி நீர் எடுக்கப் படுகிறது. தொட்டில் பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சுத்தி கரிப்பு நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மேச்சேரி, தொப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளியன்று காலை தொட்டில் பட்டி பிரிவு சாலை அருகில் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. சாலையில் பல ஆயிரம் லிட்டர் சுத்திகரிக் கப்பட்ட தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தகவல றிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் விநியோக மின் மோட்டார்களை நிறுத்திய பிறகு குடி நீர் வெளியே றுவது படிப்படியாக குறைந்தது. குழாய் உடைப்பு காரண மாக மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம், தொப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
துபாய் - கோழிக்கோடு விமானம் கோவையில் தரையிறக்கம்
கோவை, அக்.12 மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம் கோவை விமான நிலை யத்தில் தரையிறங்கியது. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி சனியன்று காலை சென்று கொண்டிருந்த ‘பிளை துபாய்’ நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட் டோர் பயணித்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவிய காரணத்தால் அரை மணி நேரத்துக்கு மேல் வானில் வட்டமிட்ட அந்த விமானம் பாது காப்பு காரணங்களுக்காக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து சனியன்று காலை 7. 45 மணியளவில் கோவையில் விமானம் தரையிறங்கியது. வானிலை சீரான தகவல் கிடைத்தபின் மீண்டும் விமானம் கோழிக்கோடு புறப்பட்டு சென்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்
தருமபுரி, அக்.12- மக்கள் கோரிக்கைகளை வலியு றுத்தி தருமபுரி மாவட்டத்தில் நவ. 7,8,9 ஆகிய தேதிகளில் மார்க் சிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற உள்ளது என சிபிஎம் மாவட்டச் செயலாளர் அ.குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தருமபுரி மாவட் டக்குழுவின் சார்பில் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள் ளதாவது. தீபாவளிப் பண்டிகையை முன் னிட்டு கூட்டுறவு பால் உற்பத்தியா ளர்கள் சங்கங்களில் போனஸ் வழங்க வேண்டும். பால் உற்பத்தி யாளர்களுக்கு தொடர்ந்து ஊக்கத் தொகை வழங்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் அத்தியாவ சியப் பொருட்கள் அனைத்தும் கிடைக்க ஆவண செய்ய வேண் டும். மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக பாலக்கோடு, பென்னாக ரம், ஏரியூர் போன்ற பகுதிகளில் நீண்ட காலமாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் நிலத்தில் முள் செடி நடும் போக்கை வனத்து றையினர் கைவிட வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்தும். நூறு நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தும் மக்கள் சந்திப்பு இயக் கம், நவம்பர் 7 8 மற்றும் 9 தேதி களில் மாவட்டம் முழுவதும் நடத் துவது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை சேதப்படுத்திய ஒற்றை யானை'
கோவை, அக். 12- கோவை, நரசிபுரம் பகுதியில் ஒற்றை யானை ஊருக்குள் புகுந்து, வாழை, வெங்காயம் மற்றும் வீடுகளை சேதப்ப டுத்திய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ள னர். கோவை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் நூற்றுக் கணக்கில் வலசை செல்கின்றன. இந்நிலையில், தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளான, நரசிபுரம், தேவராயபுரம், வண் டிக்காரனூர் போன்ற பகுதியில் வாழைத் தோட்டங்கள், வெங் காயப்பட்டறைகள், வீடுகள் உள்ளிட்டவற்றில் ஒற்றை யானை ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இந்த யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். வனத்துறை ரோந்து சென்று விரட்டிய பொழுதும், யானை ஊருக்குள் வந்து அசம்பாவிதத்தை ஏற்ப டுத்தி வந்தது. சமீபத்தில் உறங்கிக் கொண்டு இருந்த ஒரு வரை மிதித்துக் கொன்ற சம்பவம் கிராம மக்களை பீதியில் ஆழ்த்தியது. இந்நிலையில், வெள்ளியன்று நள்ளிரவு வந்த ஒற்றை யானை நரசிபுரம் பகுதியில் வழக்கம் போல வாழை தோட் டத்தை சேதப்படுத்தியும், ரூ. 5 லட்சம் மதிப்பிலான வெங்காய பட்டறையையும் சேதப்படுத்தியது. மேலும், ஒரு வீட்டை யும் சேதப்படுத்தியுள்ளது. இதனையடுத்து, விவசாயிகள் அதிகாரிகளை சந்திக்க சென்ற பொழுது, கடைநிலை பணியாளர்கள் மட்டும் இருந் துள்ளனர். அதிகாரிகள் இல்லாததால் விவசாயிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
வனங்களை பாதுகாப்போம்'
உடுமலை, அக்.12- இயற்கை, மனித குலத்திற்கு எவ்வகையில் உதவுகிறது என பொது மக்களுக்கு வனத்துறையினர் வியானன்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வன உயிரினங்கள் எவ்வாறு காடுகளை உருவாக்கு கின்றன என்பதையும், காடுகள் எவ்வாறு மழை பொழிவுக்கு காரணிகளாக உள்ளது என்பதையும், பெய்கின்ற மழை நீரை சோலைக்காடு மற்றும் புல்மலைகள் எவ்வாறு சேமித்து வைத்து நமக்கு வருடம் முழுவதும் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்கின்றன என்பதையும், புல்மலை பாதுகாப்பில் முக்கிய பங்களிப்பு குறித்தும் எடுத்துரைத்தனர்.
உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
உதகை, அக்.12- ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு குளு காலநிலையை அனுப விக்கவும் மற்றும் அங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க வும் நாள்தோறும் தமிழ்நாடு மட்டு மின்றி வெளி மாநிலத்தை சேர்ந்த ஏரா ளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஆயுத பூஜை மற் றும் விஜயதசமி பண்டிகையொட்டி பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங் களுக்கு 3 நாட்கள் தொடர் விடு முறை விடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங் களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. வெள்ளியன்று காலை முதலே உதகை தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் குவிந்தனர். 2 ஆவது சீசனையொட்டி மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட் டுள்ள மலர்களை அவர்கள் கண்டு ரசித்தனர். அத்துடன் தாவரவியல் பூங்காவில் உள்ள புல்தரையில் அமர்ந்து குழந்தைகளுடன் விளை யாடியும் தங்கள் விடுமுறையை கழித் தனர். இதைபோல் உதகை ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், பைக்காரா படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம், குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, டால்பினோஸ் காட்சி முனை, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்காவிலும் சுற்றுலாப் பயணி கள் கூட்டம் காணப்பட்டது.