districts

img

ஈரோட்டில் டிஆர்இயு தீவிர பிரச்சாரம்

ஈரோடு, நவ.28- ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தலுக்கான தீவிர வாக்கு சேகரிப்பில் டிஆர்இயு-வினர் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இத்தேர்தலில் டிஆர்இயு நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிடுகிறது. தேர்தலிற்கான பிரச்சாரம் அனைத்து பகுதி களிலும் நடைபெறுகிறது. அதன் ஒருபகுதி யாக ஈரோடு ரயில் நிலையத்தில் சிஐடியு  மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம் தலைமை யில் புதனன்று நடைபெற்றது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் பி.கனகராஜ், மாவட் டக்குழு உறுப்பினர் பொன்.பாரதி மற்றும் டிஆர்இயு மண்டலச் செயலாளர் ஹரிலால், கோட்டச் செயலாளர் எம்.முருகேசன், கோட் டப் பொருளாளர் குமரேசன், மண்டல நிர்வாகி கள் பீஜீ, சுரேஷ், ரயில்வே ஓய்வு பெற் றோர் சங்க கோட்டச் செயலாளர் சி.முருகே சன் மற்றும் கிளை நிர்வாகிகள் மண்டல நிர் வாகிகள் உட்பட பல்வேறு ஊழியர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.