districts

முதல்வர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவதில் இழுபறியா!

கோவை, டிச. 17- முதலைமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற் றிப் பெற்ற வீரர்கள் பலருக்கும், பரி சுத்தொகை இதுவரை வழங்கப்பட வில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் தமிழ்நாடு  விளையாட்டு மேம்பாட்டு ஆணை யம் சார்பில் ‘முதலமைச்சர் கோப்பை - 2024’ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதில் 12 முதல் 19 வயது வரை உள்ள  பள்ளி மாணவர்கள், 17 முதல் 25  வயது வரையுள்ள கல்லூரி மாண வர்கள், 15 முதல் 35 வயது வரை யுள்ள பொதுப் பிரிவினர், அனைத்து வயது மாற்றுத்திறனாளி கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங் கேற்றனர். மொத்த பரிசாக ரூ.37  கோடி அறிவிக்கப்பட்டது, தனிநபர்  போட்டிகளில் வெற்றி பெறுபவர்க ளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்ச மும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயி ரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயி ரமும் வழங்கப்படுகிறது.

அதே போல் குழு போட்டிகளில் முதல்  பரிசாக ரூ.75 ஆயிரமும், இரண் டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், மூன் றாம் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக  செலுத்தப்படும் என அறிவிக்கப்பட் டது.

 கோவை மாவட்டத்தில் மட்டும்  முதல்வர் போட்டியில் கலந்து கொள்ள இணையதளம் மூலம் 18  ஆயிரத்து 679 பள்ளி மாணவர்கள்,  16 ஆயிரத்து 800 கல்லூரி மாணவர் கள், அரசு ஊழியர்கள், பொதுப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 39 ஆயிரத்து 738 பேர் விண்ணப்பித்து விளையாடினர். இந்நிலையில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெற்றி  பெற்ற பல வீரர்களுக்கு பரிசுத் தொகை வரவில்லை என்ற குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட உடற்கல்வி அலு வலகத்தை தொடர்பு கொண்ட போது முறையான பதில் கிடைக்க வில்லை எனவும் மாணவர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர்.  இது குறித்து மாவட்ட உடற் கல்வி அதிகாரிகளிடம் கேட்ட போது :  

முதலமைச்சர் கோப்பை  விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரி சுத்தொகை வங்கி மூலமாக செலுத் தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 90% வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை வங்கிகள் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.

அதில் சில  மாணவர்களின் வங்கிக் கணக்க ளில் ஏற்பட்ட தவறுகள், பெற்றோர் களின் வங்கி கணக்கை வழங்குதல்  உள்ளிட்ட பிரச்சனைகள் காரண மாக, பரிசுத் தொகை செல்ல வில்லை. கோவை மட்டுமல்ல பல் வேறு மாவட்டங்களில் இந்த பிரச் சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து  ஆய்வு செய்து விடுபட்ட மாண வர்களின் பட்டியலை தயார் செய்து  வைத்துள்ளோம். தனியாக முகாம்  அமைத்து விடுபட்ட அனைவருக் கும் விரைவில் பரிசுத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டா லின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தால், இதனை மாவட்ட ஆட்சியர் நேரடியாக கண்காணித்து வரு கிறார். மாணவர்கள் யாரும் அச்சப் படத் தேவையில்லை அனைவரும்  விரைவில் பரிசு தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என் றார்.