districts

img

சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் இழுத்தடிக்கும் போக்கு

ஈரோடு, ஜன. 7- கரும்பு விவசாயிகளுக்கு பங்கு  தொகையை வழங்காமல் வஞ்சிக் கும் பண்ணாரி அம்மன் ஆலை நிர் வாகத்திடம் உத்தரவாதம் பெற் றுத்தர வலியுறுத்தி சத்தியமங்க லம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஈரோடு மாவட்டம், சத்தியமங்க லம் பண்ணாரி அம்மன் ஆலைக்கு  கரும்பு வழங்கிய விவசாயிக ளுக்கு நீதிமன்ற உத்தரவுபடி 1966  சட்ட படி 5ஏ லாபத்தில் பங்கு தொகை வழங்க வேண்டும். அதன் படி 2004 – 2005 ஆம் ஆண்டில் கரும்பு  டன் 1க்கு ரூ.30.85 வீதமும், 2008-2009  ஆம் ஆண்டு கரும்பு டன் 1க்கு ரூ. 196.26 வீதம் ரூ.14 கோடி வழங்க வேண்டும். ஆனால், ஆலை நிர்வா கம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பங்கு தொகையை வழங்காமல் காலம் கடத்தி வருகி றது.  இந்நிலையில் விவசாயிக ளுக்கு வழங்க வேண்டிய பங்கு  தொகையை மேலும் தாமதிக்கா மல் உடனே வழங்க வேண்டும் என  தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பண்ணாரி அம்மன் சர்க்கரை  ஆலை விவசாயிகள் செவ்வா யன்று கே.எம்.சதீஸ்ராஜ் தலைமை யில் சத்தி பேருந்து நிலையம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தின் மாநில பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், பண்ணாரி அம்மன் சர்க் கரை ஆலை செயலாளர் எஸ். முத்துசாமி, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர்  ஏ.எம்.முனுசாமி, பண்ணாரி அம் மன் சர்க்கரை ஆலை பொருளாளர்  எஸ்.வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏ.ஆர்.சுப் பைய்யன்,  கே.மாரப்பன் மற்றும் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் கே.எம்.விஜயகுமார் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். முடிவில்,  வேலுசாமி நன்றி கூறினார். இதனைத்தொடர்ந்து, கோரிக்கை மனுவை வட்டாட்சியரி டம் அளிக்க சென்றனர். ஆனால்  அவர் அங்கு இல்லை. வட்டாட்சி யரை சந்தித்து மனு கொடுக்கும் வரை காத்திருக்கிறோம் என அங்கேயே அமர்ந்தனர். இது  குறித்து, டி.ரவீந்திரன் கூறுகையில்,  சட்டப்படியும், நீதிமன்ற உத்தரவின் படியும் பண்ணாரி அம்மன் ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு பங்கு தொகை வழங்க வேண்டும். ஆனால் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. எனவே, வட்டாட்சியர் ஆலை நிர்வாகத்தை வரவழைத்து  பேசி எங்களுக்கு ஒரு உத்தரவா தத்தை அளித்திட வேண்டும். ஆகவே, எவ்வளவு நேரமானாலும்  வட்டாட்சியர் வரும் வரை காத்தி ருக்கிறோம் என்றார்.