கோவை, பிப்.18- அழியும் தருவாயில் உள்ள வரையாடு களை பாதுகாக்கும் வகையில், நீலகிரி தார் திட்டம் மற்றும் அரும்புகள் அமைப்பினர் இணைந்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 5 நாட்கள் விழிப்புணர்வு தெரு முனை பிரச்சாரத்தை செவ்வாயன்று துவக்கினர். தமிழ்நாடு மாநில விலங்கான “வரை யாடு” அழியும் தருவாயில் உள்ளது. அதனை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நீல கிரி தார் திட்டம் என்ற அமைப்பை உரு வாக்கி வரையாடுகளை பாதுகாப்பது குறித் தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றனர். இதன்தொடர்ச்சியாக, நீலகிரி தார் திட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட் டத்தைச் சேர்ந்த அரும்புகள் தன்னார்வ அமைப்பினர் இணைந்து, தமிழ்நாடு முழுவ தும் வரையாடு பாதுகாப்பு குறித்த விழிப்பு ணர்வு பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்ற னர். இதுவரை திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன்ஒரு பகுதியாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வரையாடு குறித்த நாடகம், பாடல் என தெருமுனை வாகன பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். ஐந்து நாட்கள் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு பயணத்தை நீலகிரி தார் திட்டம் இயக்குனர் கணேசன் துவங்கி வைத்தார். கோவை மற்றும் திருப் பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி களில் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் என 30 இடங்களில் இந்த விழிப்புணர்வு தெரு முனை வாகன பிரச்சாரங்கள் நடைபெற உள்ளது.