கோவை, ஏப்.3- பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளரை ஆத ரித்து, இடுப்பில் சிலிண்டரை கட்டி தொங்கவிட்டு, திமுக தொண்டர் நூதன பிரச்சாத் தில் ஈடுபட்டார். பொள்ளாச்சி நாடாளு மன்ற தொகுதியில் பிரச்சார களம் சூடுபிடிக்க துவங்கியு ள்ளது. அரசியல் கட்சியின் சார்பில் போட்டுயிடும் வேட்பாளர்களை ஆதரித்து பல் வேறு தரப்பினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகு திக்கு உட்பட்ட கிணத்துக்கடவு ஒன்றியம் வடசித்தூர் ஊராட்சி யைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளரான தம்பிராஜ், திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து வினோதமான பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மத்தியில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் கேஸ் சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும் என்கிற ஸ்டிக்கரை, காலி கேஸ் சிலிண்டரில் ஒட்டி, அதை இடுப்பில் கட்டி தொங்கவிட்டு, நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரின் வினோத மான இந்த பிரச்சாரம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.