திருப்பூர், செப்.10- இடைநிலை ஆசிரியர் ஊதிய வேறுபாடு களைய வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசாணை 243-ஐ நீக்க வேண்டும் உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு டிட்டோ - ஜாக் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. டிட்டோ - ஜாக் சார்பில் செவ்வாயன்று ஒரு நாள் நடைபெற்ற இந்த அடையாள வேலை நிறுத்தத்தில், திருப்பூரில் 2,500 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக டிட்டோ - ஜாக் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கி ணைப்பாளர் ராஜேந்திரன், பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமை ஏற்றனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பிரபு செபாஸ்டியன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட் டச் செயலாளர் தங்கவேலு, தமிழக தொடக் கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செய லாளர் ஜோசப், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்களும், பல்வேறு வட்டாரப் பொறுப்பாளர்களும் ஆசிரியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வரும் செப்டம் பர் 29, 30 மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதி சென்னை கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக டிட்டோ ஜாக் நிர்வாகிகள் தெரிவித்தனர்.