நாமக்கல், அக்.17- மாவட்ட அளவிலான கபடி போட்டியை, திருச்செங் கோடு நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு வியாழனன்று துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட அளவிலான கபடி போட்டி வியாழனன்று தொடங்கி, இரண்டு நாட்களுக்கு நடைபெறு கிறது. 14 வயதுக்கு உட்பட்டோர் இளையோர் மற்றும் 17 வய துக்குட்பட்டோரான மூத்தோர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற உள்ளது. இதனை திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு துவக்கி வைத்தார். இந்நிகழ் வில், திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, நகர்மன்ற உறுப்பினர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலாஜி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.