சேலம், பிப்.13- மாவட்ட அளவிலான வாழை சாகு படி தொழில்நுட்பக் கருத்தரங்கம், கொளத்தூரில் வியாழனன்று நடை பெற்றது. சேலம் மாவட்டம், கொளத்தூரில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் கள் துறையின் சார்பில், மாவட்ட அள விலான வாழை சாகுபடி தொழில்நுட் பக் கருத்தரங்கம் வியாழனன்று நடை பெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட் சியர் ரா.பிருந்தாதேவி தலைமை வகித்து பேசுகையில், 2 நாள் நடைபெறும் இக் கருத்தரங்கில் வாழை சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் வாழையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் விவ சாயிகளிடம் விரிவாக எடுத்துரைத்த னர். சேலம் மாவட்டத்தில் சுமார் 9,200 ஏக்கர் பரப்பளவில் பூவன், ரஸ்தாலி, கற் பூரவல்லி, செவ்வாழை, கதலி, நேந்தி ரன் மற்றும் ஜி 9 போன்ற இரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. வாழை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு மானிய திட்டங்களைச் செயல்படுத்தப் பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாழை சாகுபடியா ளர்களுக்கும் தொழில் நுட்பங்களை ஒன்று சேர கிடைப்பதற்காகவே இவ் வாழை சாகுபடி கருத்தரங்கம் நடை பெறுகிறது. இங்கு வருகைபுரிந்துள்ள அனைத்து விவசாயிகளும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசி ரியர்கள் வழங்கும் ஆலோசனைபடி வாழை சாகுபடி செய்து பயன்பெற வேண்டும், என்றார். இக்கருத்தரங்கில், தோட்டக்கலை துணை இயக்குநர் கே.மஞ்சுளா, ஏற் காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஜி.மாலதி, கே.வி.கே இணை பேராசிரியர் சண்முகசுந்தரம், தொழில் நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றனர்.