மே.பாளையம், ஜூலை 30- பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றத்தால் பவா னியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. இதனையடுத்து, அசம்பா வித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுப்பதற்கு, பேரிடர் மீட்பு படையி னர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட் டுள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் உள்ள பில்லூர் அணை அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக திங்களன்று இரவு 9 மணியளவில் அதன் முழு கொள்ளவான 100 அடியை எட்டி நிரம்பியது. இதனையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்வரத்தை, முழுவதுமாக உபரி நீராக பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால், பவானிக்கரையோர பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வா கம் சார்பில் வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டு. ஆற்றில் யாரும் இறங்கவோ குளிக்கவோ மீன் பிடிக்கவோ பரிசலில் பயணிக் கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது விநாடிக்கு 18 கனஅடி நீர் பவானியாற்றில் வெளியேற்றப் படுவதால், ஆற்றின் வேகம் அதி கரித்துள்ளது. இந்நிலையில், பவா னியாற்றின் கரையில் அமைந் துள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் செவ்வாயன்று ஆடிக் குண்டம் திருவிழா நடைபெற்று வருவதால், இங்கு குவிந்த ஆயி ரக்கணக்கான பக்தர்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க கூடாது என எச்சரிக்கை அறிவிப்பு விடுக் கப்பட்டு. கோவிலின் படித்துறை மற் றும் கரையோர பகுதிகளை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு வீரர்கள் கண்காணித்து வரு கின்றனர். மேலும் அசபாவிதங் களை தடுக்க மாநில பேரிடர் மீட்பு படையினரும் பைபர் படகுகள் உள் ளிட்ட மீட்பு சாதனங்களுடன் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீரில் முழ்கிய வாழைகள் கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அடுத்துள்ள சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்டது பவானிசா கர் அணை. இதன், நீர்த்தேக்க பகு தியான லிங்காபுரம், காந்தவயல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கதலி, ரோபஸ்டா, நேந்திரன் ஆகிய வாழைகளை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங் களாக கேரளா மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக மேட்டுப் பாளையத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அணையிலிருந்து உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டதால், அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் இருந்த வாழை தோட் டங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக் கான வாழை மரங்கள் தண்ணீ ரில் மூழ்கியதால், விவசாயிகள் அதிர்ச்சியும், கவலையுமடைந்த னர். மேலும், தண்ணீரில் வாழை மரங்கள் மூழ்கினால் வாழைத்தார் கள் அழுகி விடும் என்பதால் ஒரள வேனும் இழப்பை சமாளிக்கும் வகையில் விவசாயிகள் மூழ்கி கிடக்கும் தங்களது தோட்டங்களில் உள்ள நீரில் மிதந்தபடி வாழைத் தார்களை வெட்டி அகற்றி வருகின் றனர். பரிசல்கள் மூலம் வாழையை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யவுள்ளனர்.