சேலம், செப்.24- ‘லஞ்சம் தரமாட்டோம்’ எனக்கூறி சேலத்தில் நெடுஞ்சாலைத்துறை அலு வலக வளாகத்தில் 50க்கும் மேற்பட் டோர் கருப்புத்துணியை வாயில் கட்டிக் கொண்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதி யைச் சேர்ந்த கருப்பாயி என்பவர், கடந்த 20 ஆண்டுகளாக சாலை ஒப்பந் தப் பணிகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நபார்டு மற்றும் கிராம சாலைகளுக்கான ஒப்பந்தம் கோருவ தற்கு செப்.7 முதல் 23 ஆம் தேதி வரை நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில், 22 சதவிகிதம் லஞ்சம் தர மாட் டோம் எனக்கூறியும், தரச்சான்றிதழ் வழங் காமல் காலம் தாழ்த்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், கருப் பாயி உட்பட 50க்கும் மேற்பட்டோர் சேலம் ஒருங்கிணைந்த நெடுஞ்சாலைத் துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் கோட்டப் பொறியாளர் அலுவலக வளா கத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடு பட்டனர். அப்போது, முறைப்படி ஒப்பந் தம் வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும், லஞ்சம் கொடுத் தால் மட்டுமே ஒப்பந்தம் வழங்கும் நடவ டிக்கையில் ஈடுபடுவோம் என்றும் அதி காரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன் பாக சாலை ஒப்பந்தம் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட அதிகாரியை லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்த நிலையில், மீண்டும் லஞ்சம் கேட்பதாக போராட்டக்காரர்கள் குற் றஞ்சாட்டினர். இதனிடையே போராட் டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறை யினர் தடுத்து நிறுத்த முயன்றதால், அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.