districts

img

பணி நிரந்தரம்: மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா

திருப்பூர், ஆக.20 - மின்சார வாரிய ஒப்பந்தத் தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்யக்  கோரி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர்  மத்திய அமைப்பின் சார்பில் திருப் பூர், உடுமலை ஆகிய பகுதிகளில் செவ்வாயன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.  திருப்பூர் மாவட்டம் குமார்நகர் துணை மின்நிலைய வளாகத்தில் செவ்வாயன்று சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. மோகன்தாஸ் தலைமையில், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,  தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதி யில் அறிவித்தபடி, மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர் களை அடையாளம் கண்டு நிரந் தரப்படுத்த வேண்டும். பிரிவிற்கு  இரண்டு பேரை கள உதவியாளராக  ஒப்பந்ததாரர் மூலம் நியமனம் செய் யும் முடிவை கைவிட்டு, வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நியமித்து நேர டியாக தினக்கூலி வழங்க வேண்டும்.  அரசு உத்தரவுக்கு எதிராய் நிரந்தர  தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த  தொழிலாளர் முறையைப் புகுத்தக் கூடாது. பல ஆண்டுகளாக மின்வாரி யத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழி யர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.  அனல் மின் நிலையம், நீர் மின்நிலை யம், பொது கட்டுமான வட்டங்களில்  பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்க ளையும் அடையாளம் கண்டு பணி  நிரந்தரம் செய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. இதில், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.நாகராஜன், அவிநாசி கோட்டச் செயலாளர் ஜஸ்டின் திர வியம், திருப்பூர் கோட்டச் செயலா ளர் ஏ.சக்திவேல், திருப்பூர் கிளை தலைவர் (பொறுப்பு) எம்.வீரன், ஓய் வூதியர்கள் நல அமைப்பு எம்.கணே சன் உட்பட பலர் பங்கேற்றனர். உடுமலை: உடுமலை மேற்பார்வை பொறி யாளர் அலுவலகத்தின் முன்பு சிஐ டியு மின்வாரிய வட்டக்கிளை துணைத் தலைவர் எம்.கிருஷ்ண குமார் தலைமையில் ஒப்பந்த பணி யாளர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதில்,  சிஐடியு கிளைத் தலைவர் ஜீவானந் தம் துவக்கி வைத்து பேசினார்.  மண்டலச்செயலாளர் கோபாலகி ருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.  சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர்  ஜெகதீசன் வாழ்த்தி பேசினார். இதில் பலர் குடும்பத்துடன் பங்கேற் றனர்.