ஈரோடு, ஏப்.3- 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் தார்ச்சாலை ஆக்கிரமிப்பை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியரிடம் அப் பகுதி மக்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே சிறுகளஞ்சி ஊராட்சிக்குட்டது கிழக்கு தோட்டம் புதூர், பாறக்காட்டுப் புதூர், பணப்பாளையம், பணப்பாளையம் காலனி, தளவாய் பாளையம் புதூர், தொட்டியவலவு. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சென்னிமலை-ஊத்துக் குளி சாலையின் 14 ஆவது கிமீட்டரில் இக்குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியிலிருந்து ரயில்வே பாலம் வழியாக சென்று ஊத்துக்குளி, வாய்ப்பாடி விஜயமங்கலம் இணைப்புச் சாலை இணைகிறது. இதில் பள்ளி, கல்லூரி மற்றும் பனி யன் கம்பெனிகளின் வாகனங்களும் சென்று வருகிறது. மண் சாலையாக இருந்தது தார்ச்சாலையாக போடப்பட்டது. இந்த சாலையின் ஓரமாக இருக்கும் இடத்தின் சொந்தக் காரர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைந் துள்ளது என்கின்றனர். இதுகுறித்து அமைச்சர், அரசு அலு வலர்களுக்கு மனு கொடுத்தோம். எனினும் குமார், பால கிருஷ்ணன், தமிழ்செல்வன், ராஜா ஆகியோர் சாலையோர சாக்கடையை மண்ணைக் கொட்டி மூடிவிட்டு அதன் மேல் கம்பி வேலை அமைக்க முயல்கின்றனர். ஆகவே, மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலை ஆக்கிரமிப்பை தடுத்து, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திரண்டு மனு அளித்தனர்.