districts

img

பேராசிரியர்களுக்கு மேம்பாட்டுப் பயிற்சி

தருமபுரி, ஜன.2- தருமபுரி அரசு கல்லூரியில், பேராசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி வியாழனன்று துவங்கியது. நான் முதல்வன் திட்டத்தின் வழியாக தருமபுரி அரசு  கலைக்கல்லூரியில் வணிகவியல், வணிக கணினிப் பயன்பாட்டியல், வணிக நிர்வாகவியல், பொருளியல் துறைசார்ந்த பேராசிரியர்களுக்கு ஆசிரியர் மேம்பாட் டுப் பயிற்சி வியாழனன்று துவங்கியது. ஜன.8 ஆம் தேதி  வரை நடைபெறும் இப்பயிற்சியில் தருமபுரி, கிருஷ்ண கிரி மாவட்டங்களைச் சார்ந்த 70 பேராசிரியர்கள் கலந்து  கொண்டனர். நான்முதல்வன் திட்டத்தின் வழியாக மாண வர்களுக்குக் கற்பிக்கப்படும் பாடங்களைப் பேராசிரியர் களின் வழியாக சேர்ப்பதின் நோக்கமாகக் கொண்டு  இப்பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசால்  நடத்தப்படுகிற இப்பயிற்சியை பெரியார் பல்கலைக்கழ கம் தருமபுரி அரசு கலைக் கல்லூரியை மையமாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறது. கல்லூரி முதல்வர்  கோ.கண்ணன் தொடங்கி வைத்த இந்நிகழ்வில் கல்லூரி யின் மூத்த பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கு.சிவப்பிரகா சம், கணிதத்துறை உதவிப்பேராசிரியர் பிரசண்ண வெங் கடேசன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து  செயல்படுத்தி வருகின்றனர்.