திருப்பூர், நவ.9 - திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி, குப்பை வரி மற்றும் பாதாள சாக்கடை கட்ட ணம் என முதுகை ஒடிக்கும் சுமையை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி கடு மையாக உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண் டில் அந்த சொத்து வரியை செலுத்தாவிட் டால் ஒரு சதவிகிதம் அபராதம் விதிக்கப்ப டும். சொத்து வரி ஆண்டுதோறும் ஆறு சதவீ தம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. அதே போல் குப்பை வரி என்று கடுமை யாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பல ருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் நிலுவைத் தொகை செலுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்படுகிறது. அத்துடன் பாதாள சாக் கடை கட்டணம் என்று ஒரே குடியிருப்பில் இருக்கக்கூடிய வீடுகளுக்கு தனித்தனி சொத்து வரி விதிக்கப்பட்டு இருந்தால் ஒவ் வொன்றுக்கும் தனித்தனியான வைப்புத் தொகை மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மாநகராட்சி கூறி யுள்ளது. மக்கள் தலையில் அடுக்கடுக்காக கட்டணம் மற்றும் வரிச் சுமையை ஏற்றும் இந்த முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் ஆர் மணிமேகலை இந்த கட்டண உயர்வுகளை கைவிட வேண் டும் என்று வலியுறுத்தினார். பல்வேறு எதிர்க் கட்சிகளும் இக்கட்டண உயர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் திருப்பூர் மக்களின் மனநி லைக்கு மதிப்பு அளிக்காமல், மேலிருந்து மாநில அரசு மூலம் இந்த கட்டணம் விதிக்கப் பட்டுள்ளது. எனவே இதை மாற்றவோ குறைக்கவும் முடியாது என்று மாநகராட்சி நிர் வாகம் மறுப்பு தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் இந்தக் கட்டண சுமைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்க ளன்று மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் மாநக ராட்சி அலுவலகம் எதிரில் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாநக ராட்சியின் நான்கு மண்டலங்களுக்கு உட் பட்ட 60 வார்டுகளை சேர்ந்த மக்களும் பங் கேற்க உள்ளனர். இதற்காக மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநக ரம், தெற்கு ஒன்றியம், வடக்கு மாநகரம், வடக்கு ஒன்றியம், வேலம்பாளையம் நகரம் ஆகிய கமிட்டிகள் சார்பில் நேரடியாக மக்க ளைச் சந்தித்து வரிவிதிப்புக்கு எதிராக மனுக் களை கொடுத்து கையெழுத்து பெற்று திங் கள் அன்று நேரடியாக மாநகராட்சி அலுவல கத்தில் ஒப்படைக்கவும் கட்சி அணியினர் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பெருந்திர ளான மக்கள் போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட் டுக்கொள்ளப்பட்டுள்ளது. மாமன்றத்தில் ஒரே ஒரு உறுப்பினர் இருந்த போதும் மக்கள் பிரச்சனையில், குறிப் பாக அதிமுக ஆட்சி காலத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி இயக்கம் நடத்திய சூழ்நி லையில் சொத்து வரி உயர்வு கைவிடப் பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போதைய சொத்து வரி, குப்பை வரி, பாதாள சாக்கடை கட்டணம் உயர்வு ஆகியவற்றை கைவிட ஆயிரக்க ணக்கான மக்கள் இந்த இயக்கத்தில் பங் கேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.