districts

img

கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு போதுமான ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூன் 27- கலைஞர் கனவு இல்ல திட்டத் திற்கு போதுமான ஊழியர் கட்ட மைப்பை ஏற்படுத்த வேண்டும் என  வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கலைஞர் கனவு இல்லம் மற் றும் ஊரகப் பகுதியில் பழுதடைந்த  வீடுகள் பழுது நீக்கம் செய்தல்  ஆகிய திட்டங்களுக்கு போதிய பணியிடங்கள் வழங்க வேண்டும். திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமு றைகள் மற்றும் கால அவகாசம் வழங்க வேண்டும். புதிதாக இயக்கு நர், உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர், கணினி உதவியாளர், பணியிடங் களை மாநில அளவில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தரு மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின மாவட் டத் தலைவர் முகமது இலியாஸ்  தலைமை வகித்தார். மாவட்டப் பொரு ளாளர் வினோத்குமார், தணிக்கை யாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பென்னாகரத்தில் வட் டத் தலைவர் விஜயலட்சுமி தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், மாவட்ட நிர்வாகி எம்.சுருளிநா தன் கலந்து கொண்டார். பாலக் கோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், வட்டத் தலைவர் குணசேக ரன், மகளிரணி நிர்வாகி சித்ரா ஆகி யோர் பங்கேற்றனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், மாவட்டச் செயலாளர் தருமன், இணைச்செய லாளர்கள் சென்னப்பன், சுரேஷ், துணைத்தலைவர்கள் பிரின்ஸ், பாலகுமாரன், முன்னாள் தலைவர் சதீஸ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் இதேபோன்று சேலம் மாவட் டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய  அலுவலகங்கள் முன்பு ஊரக  வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் ஊராட்சி ஒன்றியம், காடை யாம்பட்டி, ஓமலூர் உள்ளிட்ட  20க்கும் மேற்பட்ட இடங்களில்  ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நா.திருவேரங்கன், மாவட் டச் செயலாளர் ஜான் ஆஸ்டின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.