districts

img

அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக

கோவை, மே 26– அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களின்   கோரிக்கைகளை தமிழக அரசு  நிறை வேற்ற வலியுறுத்தி கோவையில் வியாழ னன்று மத்திய, மாநில பொதுத்துறை ஓய்வூ தியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வின் சார்பில் ஆதரவு  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை யில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக் கான ஓய்வூதியம், ஓய்வூதிய கால பணப்ப யண்கள் உடனடியாக வழங்க வேண்டும். 78  மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். அரசு ஓய்வூதியர் மருத்துவ காப் பீட்டு திட்டத்தில் போக்குவரத்து கழக ஓய் வூதியர்களை இணைக்க வேண்டும். 1998  பின் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட் டுள்ள ஓய்வூதிய உயர்வை வழங்க வேண் டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ஆதரவாக மத்திய, மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோவை, மேட்டுப்பாளையம் சாலை யில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்கங்க ளின் ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட  தலைவர் என்.சின்னசாமி தலைமை தாங்கி னார். இதில், சங்க நிர்வாகிகள் என்.அரங்க நாதன், ஆர்.சேதுராமன், எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பி.சுரேந்திரன்,  மதன், நடராஜ், குடி யரசு,  ஞானபிரகாசம், ஜானகி, கருணாநிதி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று  கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

தருமபுரி

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்புக்குழுவின் மாவட்ட தலை வர் டி.பாஸ்கரன் தலைமை வகித்தார். தமிழ் நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பின் மாநில இணை செயலாளர் கே. குப்புசாமி கோரிக்கைகளை விளக்கி பேசி னார்.  மேலும், சங்க நிர்வாகிகள் எம்.பெரு மாள், ஆர்.சுந்தரமூர்த்தி, ஆர்.கோபாலன், பி.சுப்பிரமணியம், ஏ.சோமசுந்திரம், எம்.முனுசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு காளை மாட்டு சிலை அருகில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் என்.மணிபாரதி தலைமை வகித் தார். ஓய்வூதியர் நல அமைப்பின் மண்டல தலைவர் பி.ஜெகந்தான் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். இதில் சங்க நிர்வாகிகள் வி.பன்னீர்செல்வம், ஜி. மூர்த்தி, பி.சின்னசாமி, நந்தகுமார், என்.குப்புசாமி, என்.ராமசாமி, சி.பரமசிவம் உள் ளிட்ட சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.