நாமக்கல், டிச.18- கரிச்சிபாளையம் செல்லும் மண்சாலையை, தார்ச் சாலையாக மாற்றித்தர வேண்டும், என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள மோளிப்பள்ளியிலிருந்து, கரிச்சிபாளையம் பகுதிக்கு செல் வதற்கு மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 800 மீட்டர் நீள முள்ள இந்த மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண் டும் என, 35 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெரிய லாரிகள், சரக்கு வாகனங்கள் மூலம் வேளாண் விளைப் பொருட்களை ஏற்றி செல்ல விவசாயிகள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்ற னர். மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறி வருவ தால், இச்சாலையை தார்சாலையாக மாற்றித்தர வேண்டும். ஏரியில் மண் அள்ளுவதற்கு தனியாருக்கு உரிமை வழங்கக் கூடாது. ஏரியில் உள்ள கருவேல மரங்களை வெட்ட வேண் டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோளிப்பள்ளி சின்னமூலைக்காடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப் பினர் வனிதா தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட் டத் தலைவர் ஆதிநாராயணன் உட்பட அப்பகுதி பொதுமக் கள் பலர் கலந்து கொண்டனர். “தார்சாலை அமைக்கப்படும் வரை போராட்டம் தொடரும்” என போராட்டக்காரர்கள் தெரி வித்தனர்.