districts

img

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக.12- வெள்ளகோவில் நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக வேலை வழங்கக் கோரி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் சார்பில் திங்க ளன்று வெள்ளகோவில் புதுபேருந்து நிலையம் எதிரில் மாவட்டக்குழு உறுப்பினர் கே.பழனிச்சாமி தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில்,  வெள்ளகோவில் நகராட்சி யில் தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமலுக்கு வந் தது. இந்த நகராட்சிக்குட்பட்ட 2,4,5,8,21 ஆகிய வார்டுகளுக்கு உட் பட்ட நூற்றுக்கணக்கான பொதுமக் களுக்கு வேலை அட்டை வழங்கப் பட்டுள்ளது. இருப்பினும் ஒரு  ஆண்டு காலமாக தொழிலாளர்க ளுக்கு வேலை வழங்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் வருமா னமின்று மிகுந்த சிரமத்திற்கு உள் ளாகின்றனர். எனவே உடனடியாக வேலை வழங்கக் கோரி முழக்கங்கள்  எழுப்பட்டது. இதில், மாவட்டச் செயலாளர் எ.பஞ்சலிங்கம், சிஐடியு மாவட்ட  குழு உறுப்பினர் கே.திருவேங்கட சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.தங்க வேல், சிவநாதபுரம் கிளைச் செயலா ளர் வி.லோகேஸ்வரன், ததீஒமு மாவட்டத்துணைத்தலைவர் பி. செல்லமுத்து ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தின் நிர்வாகிகள் பி.தங்கவேல், எஸ். பழனியம்மாள், எம்.சுப்பிரமணியம் உட்பட திரளானோர் பங்கேற்றனர். முடிவில் கிளை நிர்வாகி எஸ்.கே. முத்துக்குமார் நன்றி கூறினார். இதையடுத்து, சங்கத்தின் நிர்வா கிகள் வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்றத் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.