districts

img

மான் மயில்களால் பாதிக்கப்படும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 4 - பெருமாநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் மான்கள் மற்றும் மயில்க ளால் பாதிக்கப்படும் விவசாய பயிர் களுக்கும், வெறி நாய்களால் கடித் துக் கொல்லப்படும் கால்நடைக ளுக்கும் இழப்பீடு கோரி தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம் திருப்பூர் வடக்கு ஒன்றிய கமிட்டி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பெருமாநல்லூர் நால் ரோட்டில் புதனன்று நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்க வடக்கு ஒன்றிய தலைவர்  கே.ரங்கசாமி தலைமை வகித்தார்.  இந்த போராட்டத்தில், விவசாயத் திற்கு பெரிய இடையூறாக இருக்கும்  மான், மயில் தொல்லையிலிருந்து விடுபட அதற்கு சரணாலயங்கள் ஏற் படுத்தி விளைநிலங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். பயிர் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண் டும். தெரு நாய் கடியால் பாதிக்கப்ப டும் கால்நடைகளுக்கு உரிய இழப் பீடு வழங்க வேண்டும். தெரு நாய் களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வா கத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு நிலக்கடலை சாகுபடி செய்து போதிய பருவமழை இல்லாததால் கருகிப் போன கடலை செடியால் ஏற் பட்ட மகசூல் பாதிப்புக்கு உரிய இழப் பீடு வழங்க வேண்டும்.  திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் வடக்கு பகுதி 10 ஊராட்சிகள் பயன்  பெரும் கூட்டுக் குடிநீர் திட்ட பணி களை விரைந்து முடித்து பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும். அத் திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு  வந்து வறட்சியை போக்க வேண்டும்.  விடுபட்ட குளம், குட்டைகளை இந்த  திட்டத்தில் சேர்க்க வேண்டும். விவ சாய விளைபொருள்களான தேங் காய், தக்காளி, வெங்காயம், பாலுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். வேளாண்மை, தோட்டக்கலை, பொறியியல் துறைகள் மூலமாக இடுபொருட்கள் மானிய திட்டங் கள், கருவிகள் உள்ளிட்ட அரசு திட் டங்கள் அனைத்து விவசாயிக ளுக்கும் கிடைக்கும் வகையில் அலு வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண் டும் ஆகிய கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கமிட்டனர். கோரிக்கைகளை விளக்கி விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர்  ஆர்.குமார், மாவட்ட துணைச் செய லாளர் எஸ்.வெங்கடாசலம், வடக்கு  ஒன்றிய செயலாளர் எஸ்.அப்புசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர். காளியப்பன் ஆகியோர் உரையாற் றினர். விவசாயிகள் சங்க துணைச் செயலாளர் கோவிந்தசாமி, தொரவ லூர் சக்திவேல், வள்ளிபுரம் ஆறுமு கம், பட்டம்பாளையம் நடராஜ், செட் டிபாளையம் சுப்பிரமணியம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங் கம் வடக்கு ஒன்றிய தலைவர் பரணி  சீனிவாசன் உள்பட திரளான விவசா யிகள் பங்கேற்றனர். விவசாய தொழி லாளர்கள் சங்க வடக்கு ஒன்றிய செய லாளர் சுப்பிரமணியம் நன்றி தெரி வித்தார்.