திருப்பூர், பிப்.14- வங்கிகளில் தேவையான அளவு ஊழி யர்களை நியமிக்கவும், பதவி உயர்வு வழங்கு வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மார்ச் 24, 25 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை வங்கி ஊழி யர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித் துள்ளது. இந்த வேலை நிறுத்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் திருப்பூர் டவுன்ஹால் அருகே வெள்ளியன்று நடைபெற்றது. வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு கன்வீனர் மனோகரன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழி யர் சங்கங்களின் சார்பில் கார்த்திக், உமா நாத், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் பெண் ஊழியர்கள் உட்பட அனைத்து தேசியமய மற்றும் தனியார் வங்கிகளின் ஊழியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.