districts

img

தொழிலாளர் விரோத போனஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்திடுக: சேலம் உருக்காலை அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், அக். 5 - தொழிலாளர் விரோத போனஸ்  ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி சேலம் உருக்கு ஆலையில், அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் விரோத போனஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண் டும். நியாயமான போனஸ் வழங்க வேண்டும். 8 ஆண்டுகள் கடந்தும் முடிவு பெறாத ஊதிய உயர்வு ஒப் பந்தத்தை விரைவாக இறுதி செய்ய  வேண்டும். 39 மாத அரியர் தொகையை வழங்க வேண்டும். வீட்டு வாடகைப் படி உள்ளிட்ட தொழிலாளர்களுக் கான அனைத்து சலுகைகளையும் உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அரி யர் தொகை மற்றும் சம்பள பிடித் தம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  செயில் நிர்வாகம் தொழிலாளர்க ளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத சூழ்நிலையில் வரும் 14 மற்றும் 15 தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து சங்கம் சார் பாக நடைபெறும் எனவும் ஆர்ப்பாட் டத்தில் எச்சரித்தனர். முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு சேலம் உருக்கு ஆலை சங்க  பொதுச் செயலாளர் கே.பி.சுரேஷ் குமார் தலைமை ஏற்றார். இதில்  தொமுச செயலாளர் பெருமாள், ஐஎன்டியுசி தலைவர் தேவராஜன், பிஎம்எஸ் தலைவர் வீரமணி, எல் எல்எப் செயலாளர் ரவிச்சந்திரன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி இளங் கோவன் உள்ளிட்ட தலைவர்கள் பங் கேற்று உரையாற்றினர். இதில் திர ளானோர் பங்கேற்றனர்.