திருப்பூர், டிச. 27 – பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, அரசு நிரந்தரப் பணி யிடங்களை ஒழித்துக்கட்ட வழிவகுக் கும் அரசாணைகளை ரத்து செய்ய வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தினர் திருப்பூர் மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த டிச. 17ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை முடி வின் படி ஊதியம், அகவிலைப்படி நிலுவை, காலமுறை ஊதியம் வழங்கு வது, உள்ளாட்சி மற்றும் அரசுப் பணியிடங்களில் பணி நிரந்தரப் பணி யிடங்களை ஒழித்துக் கட்டும் அர சாணை 152, 115, 139 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங் களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ் வாய்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடத் தப்பட்டது. இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட ஆட் சியர் அலுவலகம், கோட்டாட்சியர், வட் டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நெடுஞ்சாலைத் துறை, சுகாதார நிலையங்கள், வணிகவரித் துறை, தொழில் பயிற்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, வேளாண் பொறியியல் துறை அலுவலகம், கதர்
கிராமத் தொழில்துறை அலுவலகம், சார் நிலைக் கருவூலம் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அலுவலகங் கள் முன்பும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. திருப்பூர் வடக்கு, தெற்கு, உடுமலை, தாராபுரம், அவி நாசி, பல்லடம், மடத்துக்குளம், காங்கே யம், பொங்கலூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 80க்கும் மேற் பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்க ளில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் ஏ.ராணி, துணைத் தலைவர்கள் எஸ். முருகதாஸ், எஸ்.மதன்குமார், ஜெ.அந் தோணி ஜெயராஜ், எஸ்.பாண்டியம் மாள், மாவட்டச் செயலாளர் எம்.பால சுப்பிரமணியம், இணைச் செயலாளர் கள் ஆர்.ராமன், டி.வைரமுத்து, எம்.மேகலிங்கம், எஸ்.ராணி, பொருளாளர் எஸ்.முருகசாமி உள்ளிட்ட மாவட்ட, வட்ட கிளை நிர்வாகிகள் தலைமை வகித்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.