காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டம்: ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ் நாட்டை வஞ்சித்திருக்கும் மோடி அரசின் நய வஞ்ச செயலைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காதில் பூ சுற்றி ஆர்ப் பாட்டம் நடத்தினர். திருப்பூர் ரயில் நிலை யம் முன்பாக வெள்ளியன்று மாலை நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு த.பெ.தி.க. பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமை ஏற்றார். மண்டலப்பொறுப்பாளர் இல.அங்க குமார், மாவட்டத் தலைவர் சண்.முத்துக்கு மார், மாவட்டப் பொறுப்பாளர் இரமேசுபாபு, மதிமுக சார்பில் சக்திவேல், 20ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் குமார், மனிதநேய மக் கள் கட்சி நசீர்தீன், நவீன மனிதர்கள் பாரதி சுப்பராயன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி கனகராஜ், ஆதிதமிழர் பேரவை மணி உள் ளிட்டோர் கண்டன உரை ஆற்றினர். பல்வேறு அமைப்பினர் உள்பட நூற்றுக்கும் மேற்கண் டோர் காதில் பூ சுற்றி கண்டன முழக்கம் எழுப் பினர்.