தருமபுரி, ஜூன் 27- தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் உள் ளிட்ட போதைப்பொருட்களின் புழக் கத்தை ஒழிக்க வேண்டும் என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி தற்போது வரை 60க்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மற்றும் இதனை தடுக்கத்தவறிய காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கத்தை முற்றிலு மாக ஒழிக்க வேண்டும். அதற்காக தனி சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தரும புரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வியாழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் என்.கந்தசாமி தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப் பினர்கள் கே.பூபதி, எம்.அருண்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.ரவி, கே.கோவிந்தசாமி, தீ.மாரியப்பன், எம். மீனாட்சி, எஸ்.தமிழ்மணி, எம்.பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.