சேலம், செப்.24- பூர்வக்குடியான குறவர் இனத் தினருக்கு தமிழ்நாடு அரசு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், பெத்தநாய;க கன்பாளையம் வட்டம், தமைய னூர் கிராமத்தில் வசிக்கும் பழங் குடி மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்ற னர். இந்நிலையில், இப்பகுதியைச் சேர்நத் கைவினை கலைஞர்கள் 30 நபர்களுக்கு, இளவெயினியார் பண் பாட்டுக் கலை இலக்கிய அவை யத்தை சேர்ந்த குறிஞ்சி.செந்தில் குமார் என்பவரின், முன்னெடுப்பில் ஒன்றிய அரசின் ஜவுளித்துறை சார் பில் வழங்கப்படும் கைவினை கலை ஞர்களுக்கான அடையாள அட்டை பெற்று தரப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு குறவன் பழங்குடி மக் கள் முன்னேற்ற சங்க மாவட்டச் பொருளாளர் தினகரன் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார். 50க்கும் மேற்பட்ட மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்த கூடை முடை யும் கைவினை கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து செந்தில்குமார் கூறுகையில், சேலம் மாவட்ட ஆட் சியரின் “பிளாஸ்டிக் இல்லா ஏற் காடு” என்ற விழிப்புணர்வு பிரச் சாரத்தை இளவையினர் பண் பாட்டு கலை இலக்கிய அவையத் தின் மூலம் வரவேற்கிறோம். அதே வேளையில், பிளாஸ்டிக்கினால் ஆன கூடை, முறம் ஆகியவை பயன் பாட்டுக்கு வந்த பிறகு, மூங்கிலால் ஆன பொருட்களின் பயன்பாடு குறைந்துவிட்டது. தற்போது தமி ழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைவிதித்துள்ள நிலையில் மீண்டும் சுற்றுச்சூழலை மாசு படுத்தாத இயற்கையான மூங் கிலால் தயாரிக்கப்பட்ட பொருட் களின் பயன்பாடு அதிகரித்துள் ளது. எனவே, மூங்கில் கூடை முறம் மற்றும் அலங்கார பொருட்கள் தயார் செய்யும் பழங்குடி மலைக் குறவன் இனத்தை சார்ந்த கைவினை கலைஞர்களுக்கு தாட்கோ அல் லது அம்பேத்கர் தொழில் முனை வர் திட்டத்தின் கீழ் கடனுதவி செய்து இந்த தொழிலை ஊக்கு விக்க வேண்டும். 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி மூங்கில் வெட்ட அனு மதிக்க நடவடிக்கை வேண்டும். குற வர்/கொறவர் சமூக பட்டியல் பிரச் சனை மற்றும் சமூகநீதி சார்ந்த பிரச் சனைகளை களைய தனியாக ஒரு ஆணையத்தை உருவாக்க வேண் டும். தமிழ் குறவர்/கொறவர் என்ற ஒற்றை சமுதாயத்தின், உட்குழுக் களை தனித்தனி சாதியாக சீர் மரபினர் (DNC) பட்டியலில் பிரித்து வைத்துள்ளதை தமிழக அரசு சீர் மரபினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். பூர்வகுடியான குறவர் இனத்தினருக்கு அரசின் நல்வாழ்வு திட்டங்கள் கிடைத்திட தனி நலவாரி யம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.