பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்போம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய வங்கி ஊழியர் சம்மேளம் சார்பில், மேட்டுப்பாளையத்திலிருந்து துவங்கிய 4 ஆயிரம் கி.மீ. பிரச்சாரம் பயணக்குழுவிற்கு, காந்திபுரம் பெரியார் சிலை முன்பு உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. இதில் வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் மகேஸ்வரன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் கே.மனோகரன் உட்பட பிஎஸ்என்எல், அரசு ஊழியர் சங்கம், விவசாயிகள் சங்கம், மின்வாரிய ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.