districts

img

முறையாக குடிநீர் விநியோகிக்க கோரிக்கை

திருப்பூர், பிப்.28 - திருப்பூர் மாநகராட்சி 55 ஆவது வார்டு பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோ கிக்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமையில் பொதுமக்கள்  மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.  திருப்பூர் மாநகராட்சி 55 ஆவது வார்டு ஈஸ்வரமூர்த்தி  நகர் 6ஆவது குறுக்கு வீதி பகு திகளில் உள்ள குடியிருப்புகளில் 150க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் 6 மாதங்களுக்கும் மேலாக  குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்பட வில்லை. சீராக குடிநீர் விநியோகிக்க கோரி பலமுறை மாநகராட்சி ஊழியர்களிடம் முறை யிட்டும் பிரச்சனை தீரவில்லை. இந்நிலை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையில் பொதுமக்கள் மாநகராட்சி அலுவ லகத்தில் வெள்ளியன்று மனு அளித்தனர். மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் நடத்துவோம் என தெரி வித்துள்ளனர்.  இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி. ஜெயபால், மாநகரக் குழு உறுப்பினர்கள் கே. பொம்முதுரை, என்.சஞ்சீவ், எ.செல்லமுத்து,  சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலன், வெள்ளியங்காடு கிளைச் செயலாளர் பி.ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.