districts

img

வங்கியில் அடகு வைத்த தங்க நகைகளுக்கு பதில் போலி நகைகள் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளதாக புகார்

திருப்பூர், செப்.16- பொங்கலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் விவசாயிகள், பொது மக்கள் அடகு வைத்த தங்க நகைகளை,  நூதன முறையில் மோசடி செய்து தங்க  நகைகளுக்கு பதிலாக போலி நகை களை லாக்கரில் வைத்து வாடிக்கையா ளர்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வரு வதாக புகார் எழுந்துள்ளது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வாரம் ஒருமுறை திங்களன்று குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இக்கூட்டத்தில் பொதுமக்கள்  கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகள்  தொடர்பாக மனு வழங்குவார்கள். இந் நிலையில், இந்த வாரம் அரசு விடுமுறை  என அறிவிக்கப்பட்டு பின்பு மாற்றப்பட் டதால், பொதுமக்கள் இன்றி வெறிச் சோடி காணப்பட்டது. சிலர் மட்டுமே வந் திருந்து மனு அளித்தனர்.    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த  தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப் பின் மாநில இணை பொதுச்செயலா ளர் ஈபி அ.சரவணன் அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட் டம், பல்லடம் வட்டம், திருச்சி - பல்லடம்  சாலை பொங்கலூரில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கி கிளை செயல்பட்டு வருகி றது. இந்த வங்கியில் உள்ளூர் மட்டு மின்றி சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களும் வாடிக் கையாளர்களாக இருந்து வருகின்ற னர். விவசாயத் தொழிலை சார்ந்து வாழும் கிராம மக்களுக்கு இவ்வங்கி தங்க நகை கடனை அதிகளவில் வழங்கி வந்துள்ளது. இந்நிலையில் பொங்கலூர் பகுதியில் உள்ள காட்டூர் பகுயை சேர்ந்த நாகராஜ் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தன்னுடைய தங்கச் செயின், நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட 56.500 கிராம் நகையை பொங்கலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் அடமானம் வைத் துள்ளார். அதன் தொடர்ச்சியாக கடந்த  2022, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுக ளில் மூன்று முறை தங்க நகைகளை  வங்கிக் கிளையில் கடனை புதுப்பித்து  வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்  9 ஆம் தேதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் வைத்திருந்த தன்னுடைய தங்க செயின், நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட 56.500 கிராம் நகை கடனை  புதுப்பித்து வைத்துள்ளார். அப்போது அடமானம் வைத்திருந்த நகைகளில் 9  கிராம் கொண்ட இரண்டு மோதிரங்கள் போலியாக உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக இது  தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி மேலா ளரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக் காமல் திருப்பி அனுப்பியுள்ளார். இது தொடர்பாக எங்கள் அமைப்பிற்கு தக வல் கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட இந் தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் மேலா ளரை சந்தித்து கேட்டபோது, இந்த வங்கிக் கிளையில் ஏற்கனவே நகை மதிப்பீட்டாளர் பணியில் இருந்த கரு ணாநிதி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட  அலுவலர்கள் தற்போது பணியில் இல்லை. கருணாநிதியை நேரில் அழைத்து கேட்கலாம் என தெரிவித் தார்.  நகை மதிப்பீட்டாளர் கருணாநிதி நேரில் வந்து இதை பெரிது பண்ண வேண்டாம். போலியான (9 கிராம்) இரண்டு மோதிரங்களுக்கு பதிலாக ரூ.51 ஆயிரம் பணத்தை அடகு வைத்த  நாகராஜனிடம் வங்கி மேலாளர், கருணா நிதி உள்ளிட்ட வங்கி அலுவலர்கள் கொடுத்தனர். மேலும், வங்கி மேலாளர்,  அடகு வைத்த நாகராஜன் மற்றும் ஏற் கனவே நகை மதிப்பீட்டாளர் பணியில் இருந்து கருணாநிதியிடமும் நடந்த சம்ப வம் தொடர்பாக கடிதம் எழுதி வாங்கி னார்.  இந்நிலையில் இந்த வங்கி கிளை யில் 200க்கும் மேற்பட்ட விவசாயி கள், பொதுமக்கள் தங்களுடைய தங்க  நகைகளை அடமானம் வைத்துள்ள தால், தங்களுடைய தங்க நகைகளும் போலியாக மாற்றப்பட்டிற்குமோ என்ற  சந்தேகம் எழுந்துள்ளது. பொதுமக் கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக் கும் வகையில் உடனடியாக வங்கியில் அடகு வைக்கப்பட்டிருக்கும் அனைத்து   நகைகளையும் எடுத்து தரம், எடையை  முழுமையாக பரிசோதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

விவசாயப் பயிர்களை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேனாபதி என்பவர் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, காங்கேயம் தாலுகா அகஸ்திலிகம்பாளையம் பகு தியில் விவசாயம் செய்து வருகிறேன். வெங்கட்டரமன சாமி கோவில் காங்கே யம், இந்து அறநிலைக்கு சொந்தமான 3.85 ஏக்கர் பூமியை குத்தகை ஏலத் தில் எடுத்து, விவசாயம் செய்து வருகி றேன். இந்நிலையில், அருகில் உள்ள கோழிப்பண்ணைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பட்டையகவுண்டர் மகன் பழனிசாமி, அவரது மகன் நட ராஜ் (எ) கண்ணையன் ஆகியோர் என்  மீது கோபம் கொண்டு, நான் கோவில்  பூமியில் விவசாயம் செய்ய எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றனர். கடந்த 28.10. 2023 அன்று நான் விவசாயம் செய்யும் பூமியில் நட்ராஜ் மற்றும் சுராஜ், டிராக் டர் டிரைவர் ஒருவரும் மற்றும் நடரா ஜின் தகப்பனார் பழனிசாமி ஆகிய மூவ ரும் டிராக்கடரில் பதிவு எண் போர்டை  கழட்டி வைத்து விட்டு முன்னேற்பாட்டு டன் வெங்கட்ட இரமணசாமி கோயில் பூமியில் அத்துமீறி உள்ளே நுழைந்து எனது விவசாய பயிர்களை உழவு ஓட்டி  அழித்துவிட்டனர். இதுகுறித்து, காவல்  நிலையத்தில் புகார் அளித்தும் நடவ டிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே முதல் தகவல் அறிக்கை வழக் கில் சார்சிட் இறுதி அறிக்கையை நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என 8 மாதமாக உங்க ளிடமும், மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளரிடமும் 62 மனுக்கள் கொடுத்துவிட்டேன். இதுகுறித்து உரிய  விசாரணை மேற்கொண்டு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட் டுள்ளது. 

வாரிசு சான்றிதழ் தர மறுக்கிறார் விஏஒ

கணேசன் (81) என்பவர் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, தாராபுரம் வட் டத்திற்குட்பட்ட அலங்கியம் தெற்கு அரி ஜன தெரு பகுதியில் வசித்து வருகி றேன். எனது தகப்பன் பெயர் பெரிய சாமி. அவருக்கு நான் ஒரே மகன். எனக்கு வாரிசு சான்றிதழ் வேண்டி கிராம  நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித் தேன். ஆனால் அவரோ என் தந்தைக்கு  ஐந்து மகன்கள் உள்ளதாக கூறி எனக்கு  வாரிசு சான்றிதழ் தர மறுக்கிறார். எனது  தந்தைக்கு நான் ஒரே மகன் தான். என்னி டம் அதற்கான ஆதாரம் உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த் திகேயன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமார ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக  உதவியாளர் (பொது) (பொ) ஜெயரா மன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்)  சாம்சாந்தகுமார், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல  அலுவலர் செல்வி, துணை ஆட்சியர் கள் மற்றும் அனைத்து அரசுத்துறை களின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.