districts

img

நீதிமன்றம் உத்தரவிட்டும், நல்லதங்காள் அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம்

தாராபுரம், ஜன - 17 நல்லதங்காள்  அணைக்கு  நிலம்  கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு  தொகை போதாது என மேல்முறையீட் டில் நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீடு தொகை வழங்காததால், பாதிக்கப் பட்ட விவசாயிகள் கோட்டாட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட முடிவு செய் துள்ளனர். தாராபுரம் அழகு நாச்சியம்மன் திரு மண மண்டபத்தில் உழவர் உழைப்பா ளர் கட்சி மாநில செயற்குழு கூட்டமும்,  உழவர் தின கொடியேற்று விழாவும் மாவட்ட தலைவர் அலங்கியம் ஈஸ்வர மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.  மாநிலப் பொருளாளர் பாலசுப்பிரம ணியம், மாநிலச் செயலாளர் ஈஸ்வரன், மாநில மகளிர் அணி தலைவர் டாக்டர்  ராஜரீகா, ஈரோடு மாவட்ட தலைவர் மகு டீஸ்வரன், திண்டுக்கல் மாவட்ட தலை வர் மணிவேல், மாநில ஊடகப்பிரிவு  தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்த னர். இக்கூட்டத்தில், தாராபுரம் தாலூகா, பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் அணைக்கு விவ சாயிகள் 750 ஏக்கர் நிலத்தை 2002 ஆம்  ஆண்டு வழங்கினர். அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகை போதாது என  தாராபுரம் உரிமையியல் நீதிமன் றத்தில் மேல்முறையீடு செய்ததில், மாணவாரி நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.  70 ஆயிரம், பாசன நிலங்களுக்கு ஒரு  லட்சமும் 15 சதவீதம் வட்டியுடன் இழப் பீடு வழங்க வேண்டும் என உத்தர விட்டது. ஆனால் இழப்பீட்டுத் தொகை  வழங்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. எனினும் இதுவரை விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை. பிப்ரவரி 28 ஆம்  தேதிக்குள் இழப்பீடு வழங்கப்பட வில்லை எனில் மார்ச் 1 ஆம் தேதி  தாராபுரம் கோட்டாட்சியர் அலுவல கத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகளு டன் முற்றுகையிட்டு போராட்டம் நடத் துவது என முடிவு செய்யப்பட்டது.