districts

img

பத்திரிக்கையாளர் மரணம்: பி.ஆர்.நடராஜன் எம்.பி., இரங்கல்

கோவை, மே 29- தினமணி செய்தி நிறுவனத்தின் புகைப்ப டக் கலைஞர் அஜய் மறைவுக்கு, மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற  உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் இரங்கல் தெரி வித்துள்ளார். கோவை தினமணி நாளிதழில் புகைப்ப டக் கலைஞராக பணியாற்றி வந்தவர் அஜய்  ஜோசப். இவர் கடந்த ஞாயிறன்று பொள் ளாச்சி பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, கோவை  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,  புதனன்று காலை சிகிச்சை பலனின்றி அவர்  உயிரிழந்தார். இதனையடுத்து அஜய் ஜோசப்பின் உடல் கோவை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்யப் பட்டு, பின்னர் அவரது சொந்த ஊரான பொள் ளாச்சி, ஆனைமலை பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. புகைப்ப டக் கலைஞர் அஜய் ஜோசப்பின் மறைவுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை  நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்  இரங்கல் தெரிவித்துள்ளார். “புகைப்படக் கலைஞர் அஜய் மறைவு செய்தி அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தார் மற்றும் ஊடக நண்பர்க ளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித் துக் கொள்கிறேன்” என பி.ஆர்.நடராஜன் எம்.பி., தெரிவித்துள்ளார். அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தல் கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், மறைந்த அஜய்க்கு, மனைவி  மற்றும் 2 சிறு வயது குழந்தைகள் உள்ளனர்.  அவரது இந்த திடீர் மறைவு, அவரது குடும் பத்திற்கு பேரிடியாக இறங்கியுள்ளது. மறைந்த அஜயின் குடும்ப பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, அரசு விரை வாக அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவா ரணத்தை வழங்க வேண்டும். அதேபோல்,  அவர் பணியாற்றிய செய்தி நிறுவனமும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.