districts

img

நஞ்சராயன் குளத்தில் செத்து மிதந்த மீன்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை

திருப்பூர், மே 21 – திருப்பூர் அருகே நஞ்சராயன் பறவை கள் சரணாலயம் அமைந்துள்ள குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதன்  காரணாமகா அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால், மக்கள் கடும் அவதியடைந்தனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே  அமைந்துள்ள நஞ்சராயன் குளம் ஆண்டுதோ றும் வலசை வரும் வெளிநாட்டு, உள்நாட்டுப்  பறவைகளின் சரணாலயமாக விளங்கி வரு கிறது. இங்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் பறவை கள் தங்கிவிட்டு செல்வது வழக்கம். இத னைத் தொடர்ந்து தமிழக அரசு இந்தக் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறி வித்து உள்ளது. 280 ஏக்கர் பரப்பளவு கொண்ட  நஞ்சராயன் குளத்தில் ஏராளமான மீன்கள் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையின் போது ஓடை நொய்யலாறு என அனைத்து இடங்க ளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.  இதனை பயன்படுத்தி கொண்டு சில சாய ஆலைகள் முறைகேடாக சாயக்கழிவுகளை திறந்து விட்டுள்ளனர். இந்த ரசாயனம் மிகுந்த கழிவு நீர் நஞ்ச ராயன் குளத்தில் கலந்ததால் அதில் வாழ்ந்த எண்ணற்ற மீன்கள் உயிரிழந்து தண்ணீரில் மிதந்தன. மேலும் மீன்கள் இறந்து போய்  அகற்றப்படாமல் இருப்பதால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகி றது. உடனடியாக அந்த மீன்களை அப்புறப் படுத்தி சுகாதார சீர்கேட்டை தடுப்பதுடன் முறைகேடாக சாயக்கழிவுகளை திறந்து விடும் சாய ஆலைகளை கண்டறிந்து கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேசமயம் ஓரே சமயத்தில் அதிகளவு மழைநீர் குளத்தில் சென்று சேர்வதால் ஆக்சிஜன் அளவு பாதிக்கப்பட்டு மீன்கள் இறப்பது வழக்கமாக நடைபெறுவதுதான் என்று மீன் வளத்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். அத்துடன் நஞ்சராயன் குளத்திற்கு மீன் வளத்துறை அலுவலர் களை அனுப்பி ஆய்வு செய்வதாகவும் தெரி வித்தனர்.

;