தாராபுரம், செப். 19 - தாராபுரம் பஸ் நிலைய மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலை யில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து நீட்டிக்கொண்டி ருக்கும் கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருப்பூர் ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் தாரா புரம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக மேம்பாலம் கட்டப் பட்டுள்ளது. இந்த பாலத்தின் கீழ் அமராவதி ரவுண்டானா டாக் டர் அறிவானந்த் மருத்துவமனை அருகில் சர்வீஸ் சாலையில் சாலை பெயர்ந்து அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையில் கான்கிரீட் போடப்பட்டுள்ளதால் பள்ளம் விழந்த இடத்தில் உள்ள கான்கிரீட் கம்பிகள் நீட்டிக் கொண்டு வெளியே தெரியும் வகையில் உள்ளது. இந்த கம்பிகளால் இருசக்கர வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் செல்லும்போது கம்பி கள் நீட்டிக்கொண்டிருக்கும் பள்ளத்தில் நிலை கொள்ள முடியாமல் கீழே விழுகின்றனர். அதிக போக்குவரத்து உள்ள இப்பகுதியில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் உடனடியாக சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.