தாராபுரம், மே 25 - தாராபுரம் ஐந்து முனை சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி ஊழியர்கள், வாடிக்கையா ளர்களை அவமதிப்பு செய்து, அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வங்கி வாடிக்கையாளர் ஆர்.வெள்ளியங்கிரி என்பவர் தெரிவிக்கையில், நான் இந்த வங்கியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கணக்கு வைத்துள்ளேன். இந் நிலையில், கடந்த சில நாட்களாக பணம் எடுக்க செல்லும் போது அலைக்கழிக்கின்றனர். ரூ2000 நோட்டு செல்லாது என அறிவிப்பதற்கு முன்பே எனது வங்கிக்கணக்கில் பணம் டெபா சிட் செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும்போது எனது கணக் கில் இருந்து பணம் எடுத்துக் கொள்வது வழக்கம். இந்நிலை யில், தற்போது வங்கிக்கு சென்று பணம் எடுக்க சென்றபோது, பணியில் இருந்த ஊழியர் இப்போதைக்கு கணக்கில் இருந்து ரொக்கபணம் எடுக்க இயலாது எனத் தெரிவித்தார். நான் நீண்ட நாள் வாடிக்கையாளராக உள்ள நிலையில், வங்கியின் மேலாளரிடம் இதுகுறித்து தெரிவித்தேன். அவர் வங்கி ஊழிய ரிடம் இவர் நம்முடைய வாடிக்கையாளர்தான் பணத்தை வழங்குங்கள் என கூறினார்.
இதனால், கோபமடைந்த ஊழி யர் நான் அளித்த செலானில் கையெழுத்து சரியாக இல்லை எனத்தெரிவித்து பணம் தர மறுத்துவிட்டார். மீண்டும் ஒரு செலானில் எழுதி கொடுத்தபோது வங்கியில் போதிய பணம் இல்லை என பழிவாங்கும் வகையில் அனுப்பி விட்டார் என் றார். இதுகுறித்து மேலும் அங்கிருந்த இதர வாடிக்கையா ளர்கள் கூறுகையில், இந்த வங்கியில்தான் முதியோர் ஓய்வூதி யத்தொகை பெறுபவர்களின் கணக்குகள் உள்ளது. அதை எடுக்க வரும் முதியவர்களை கால் கடுக்க நிற்கவைப்பதும், அதுகுறித்து கேட்டால் முதியவர்களை கடுமையான சொற்க ளால் திட்டுவதும் நடக்கிறது. எனவே இதுகுறித்து வங்கியின் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப் பதோடு வாடிக்கையாளர்களை கண்ணியமாக நடத்த அறிவு றுத்த வேண்டும் என்றனர். பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வேண்டும் என்கிற போராட்டத்தை மக்கள் நலனில் அக்கறை கொண்ட இடது சாரி கட்சிகள் உள்ளிட்டு, ஊழியர்களோடு இணைந்து போராட் டம் நடத்தி வருகிற நிலையில், இதுபோன்ற ஒன்றிரண்டு ஊழி யர்களின் செயல் அரசுத்துறையின் மீதான அதிருப்த்தியை உருவாக்கவே வழி செய்கிறது. வங்கி நிர்வாகம் உரிய தலை யீடு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.