districts

img

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் உருவாக்கிடுக

கோவை, பிப்.12- சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் உருவாக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு சுமைதூக்கும் தொழிலா ளர்கள் சங்கத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு  தனிசட்டம், நலவாரியம் ஏற்படுத்த‌ வேண் டும். சரக்கு பரிவர்த்தனை வரியில் 2 சத விகிதம் நலவாரிய நிதியை உருவாக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசு குடோன்கள், ரயில்வே கூட்செட் தனி யார் குடோன்கள், டிரான்ஸ்போர்ட் மற் றும் டாஸ்மாக் குடோன்களில் வேலை செய்யும் சுமைப்பணி தொழிலாளர்க ளுக்கு இஎஸ்ஐ, இபிஎப் போன்ற சட்ட சமூக பாதுகாப்பு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்க ளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் முன்னு ரிமை அடிப்படையில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாதம் ரூ.3  ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, சிஐடியு சுமைப்பணி தொழிலா ளர் சங்கத்தினர் புதனன்று மாநிலம் தழு விய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக, சிஐடியு கோவை ஜில்லா சுமைதூக்கும் தொழி லாளர்கள் சங்கத்தினர் கோவை ஆட்சி யர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட் டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலை வர் எம்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை யாற்றினார். கோவை ஜில்லா தங்க நகை தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பி.சந்திரன், சுமைதூக்கும் பொது தொழிலாளர் சங்க கௌரவ தலைவர் எம்.ஏ.பாபு, மாவட்டச் செயலாளர் ஆர். ராஜன், பொருளாளர் எம்.எஸ்.பீர்முக மது ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், சுமைப்பணி சங்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திர ளான சுமைப்பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத்தில், சேலம் ஜில்லா சுமைதூக்கும் தொழி லாளர்கள் சங்கம் மற்றும் சேலம் ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழி லாளர் சங்கம் சார்பில், புதனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சுமைப்பணி தொழிலாளர் சங்க தலைவர் எ.கோவிந் தன் தலைமை வகித்தார். சிஐடியு  தலைவர்கள் ஆர்.வெங்கடபதி, பி.ஆறு முகம், பி.சக்தி, துணைச்செயலாளர் பிரபு, நிர்வாகிகள் தண்டபாணி, வெள் ளியங்கிரி, மாரிமுத்து, சங்கர் மதியழ கன், அன்பு, கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலை அருகே மாவட்ட சுமைதூக்கும் தொழிலாளர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட உதவித் தலைவர் செங்கோடன் துவக்கவுரை யாற்றினார். மாவட்ட உதவிச்செயலா ளர் சிவராஜ் வாழ்த்திப் பேசினார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச் சாமி, சுமைப்பணி தொழிலாளர் சங்க  துணைத்தலைவர் ஜெயராமன், டிசி எம்எஸ் தலைவர் கந்தசாமி, டாஸ்மாக் குடோன் சுமைப்பணி சங்க தலைவர் பெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.