நாமக்கல், மே 24- சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்ப வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆட்சியர் மருத்துவர் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில், வருவாய் துறை, காவல் துறை, டாஸ்மாக், வனத் துறை, கலால் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஆட்சியர் தெரிவிக்கையில், கள்ளச்சாரா யம் ஒழிப்பு தொடர்பாக சம்மபந்தப்பட்ட துறை சார்ந்த அலு வலர்களிடம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனை ஈடுபடுவர்களின் மீது வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாரா யங்கள் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற் கொள்ளவும், சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார்கள் அளிக்க மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கட்டு பாட்டில் செயல்படும் 88383 52334 என்ற அலைபேசி எண்ணிற்கு நேரடியாகவும், வாட்ஸ் ஆப் மூலமாகவும் தங்களது புகார் களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.