districts

நுண் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், செப். 6 - ஏழை மக்களுக்கு கடன் கொடுப்பதாகச் சொல்லி கடன் வலையில் சிக்க வைத்து அவர் களை மிரட்டி அவமானப்படுத்தி பணம் வசூ லிக்கும் நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் அதன்  ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் தாராபு ரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ்  வெள்ளியன்று, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் குண்டடம் ஒன்றியம் சூரியநல்லூர் பஞ்சா யத்தில் உள்ள இடையன் கிணறு, நவக் கொம்பு போன்ற பகுதிகளில் உள்ள பட்டிய லின மக்கள், நுண் நிதி நிறுவனத்திடம் இருந்து ஏராளமான கடன்களை பெற்றிருக்கி றார்கள். கடன் பெற்ற மக்கள் தற்சமயம் தற் கொலை பாதைக்குத் தள்ளப்படும் அவலம்  நிலவுகிறது.  தாராபுரம் வட்டத்தில் எல்என்டி, கிராம விடியல், மகேந்திரா ஜீவன் இப்படி எண் ணற்ற நுண் நிதி நிறுவனங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் கிரா மப்புறங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களி டம் ஏராளமான நிபந்தனைகளை எழுதி வாங் கிக்கொண்டு கடன்களை வழங்குகிறார்கள். மக்களும் எப்படியாவது பணம் கிடைத்தால் சரி என்ற உணர்வோடு வறுமைக்கு ஆட்பட்டு  பணத்தை பெறுகின்றனர். வாங்கிய பின் கடனை திருப்பி செலுத்த இயலாத நிலை  நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில் கிராமப்பு றங்களில் மேற்கண்ட நிதி நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய, வசூலிக்கக் கூடிய அலுவ லர்கள் அதிகாலை ஏழு மணிக்கு ஊருக்குள்  வந்து விடுவார்கள். மாலை 7 மணி வரை ஊரில் சுற்றி கொண்டு இருப்பார்கள். அவர்க ளுக்கு ஓய்வு இருக்கிறதா? உணவருந்து செல்கிறார்களா? என்பதெல்லாம் கூட தெரி யாது. கடன் வாங்கியவர்கள் இவர்கள் வருவ தைப் பார்த்து காடுகளுக்குள் சென்று மறைந்து கொள்வார்கள். இவர்கள் சென்ற  பிறகு வீட்டுக்கு வருவார்கள். அப்படிப்பட்ட நிலைமையும் இருக்கிறது. சில சமயம் கடன்  வசூலிக்க வருபவர்கள் வீட்டிலேயே இருந்து  விடுவார்கள். வீட்டை விட்டு போக மாட்டேன்  என்று சொல்லி அடம் பிடிப்பார்கள். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டு பேசினா லும் கேட்க மாட்டார்கள். காவல்துறை மூலம்  நடவடிக்கை வரும்போது இவர்கள் வீட்டை  விட்டு ஓடிப் போய் விடக்கூடிய சம்பவம் நடந் துள்ளது. கடன் பெற்றவர் இறந்து விட்டால்  கடன் தள்ளுபடி செய்யப்படும் வழக்கம் உள்ளது. ஆனால், சில நிறுவனங்களில் மனைவி இறந்தால் கணவனை கடன் திருப்பி  செலுத்த வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தக் கூடிய நிலையும் இருக்கிறது. சிலர் வீட்டரு கில் நின்று கொண்டு வீட்டைப் பூட்டி சீல்  வைக்க வேண்டும், வீட்டிலிருந்து வெளியே றுங்கள் என்று மிரட்டக்கூடிய நிலைமை உண்டு. சிபிஎம் சார்பில் வீட்டை பூட்டினால்,  பூட்டை உடைப்போம் என்று தைரியம் சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. பணம் பெற்றது உண்மை, பணத்தை திருப்பிச் செலுத்த கால அவகாசம் மட்டும் தான் கேட்கப் படுகிறது. அதை தர மறுத்து எண்ணற்ற அவ மானங்களை மக்கள் அனுபவிக்க வேண்டி  உள்ளது. எனவே மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்  நுண்நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட பெண்களை வைத்து தாராபுரம் கட்சி அலுவ லகத்தில் ஒன்பதாம் தேதி காலை 11 மணிக்கு  சிறப்பு பேரவை கூட்டம் நடக்க உள்ளது. எளியே மக்களே பாதிக்கக்கூடிய இந்த  நுண்நிதி நிறுவனத்தினுடைய அடாவ டித்தனத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட மக் கள் அனைவரும் தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு ஒன்பதாம் தேதி அன்று வர வேண்டுமாய் கேட்டுக்கொள் கிறோம். அவமானங்களை தாங்கிக் கொண்டு இருக்க வேண்டியது இல்லை, எதிராக குரல் கொடுப்போம். மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக இருக்கிறது.   எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கீழ்கண்ட கோரிக்கைகளை நிறை வேற்றித் தர வேண்டுமாய் கேட்டுக்கொள் கிறோம். ஏழை மக்கள் பெற்றுள்ள கடனில்  கடனுக்கான வட்டி அபராத வட்டி ஆகிய வற்றை தள்ளுபடி செய்ய வேண்டுகிறோம். வீட்டுக்கு வந்து வீட்டில் அமர்ந்து கொண்டு  மிரட்டுவது, தகாத வார்த்தைகள் பேசுவது, போன்ற அலுவலர்கள் மீது தீண்டாமை வன் கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிபில் ஸ்கோர் குறைவாக  இருந்தாலும், கடன்கள் வழங்கப்படும் என்று  சொல்லி ஒவ்வொருவருக்கும் ஐந்து கடன், ஆறு கடன் வழங்கும் நிறுவனங்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறெல்லாம் கடன் வழங்குவோம் என்று சொல்லி ஊர்கள் தோறும், வீடுகள் தோறும் நோட்டீஸ் அடித்து ஒட்டுகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண் டும். தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் இது  குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  தெரிவித்துள்ளார்.