திருப்பூர், செப். 2 - திருப்பூர் 43 ஆவது வார்டுக்கு உட்பட்ட பூச்சக்காடு தண் ணீர் தொட்டி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக திருவிளக்கு எரியவில்லை. இதுகுறித்து புகார் தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஞாயிற் றுக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் கள் அப்பகுதி பொதுமக்களுடன் தீப்பந்தம் மற்றும் மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், தெருவிளக்கு எரியாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவில் வெளியே வர முடியவில்லை. எனவே உடனடியாக தெருவிளக்கை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜி. ஈஸ்வர மூர்த்தி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகரக் குழு உறுப்பினர்கள் பி.பாலன், பா.ஞானசேகர், சி.பானுமதி மற்றும் கருவம்பாளையம் கிளைச் செயலாளர் ராஜகோ பால் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.தெருவிளக்கு பிரச்சனையை சரி செய்ய சிபிஎம் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்