districts

img

இஎஸ்ஐ நிர்வாகத்தை கண்டித்து சிபிஎம் மறியல்

கோவை, நவ.7- ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்காத இஎஸ்ஐ நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட்  கட்சியினர் மருத்துவமனையை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.  சிஐடியு கோவை மாவட்ட துணைப் பொதுச்செயலாளர் கே.ரத்தினகுமாரின் இளைய மகன் விஜயகுமார் வியாழனன்று  விபத்து ஒன்றில் வியாழனன்று காலமானார். அவரது உடல் கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் உடற்கூராய்வு  செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டது. உடற்கூராய்வு முடிந்து, நான்கைந்து மணி நேரம் ஆகியும் மருத்துவமனை நிர்வாக சார்பில் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக் கப்படவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப் பியபோதும், அலட்சியமான பதிலையே இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித் துள்ளது. இதனையடுத்து, இஎஸ்ஐ மருத்து வமனை நிர்வாகத்தின் அலட்சியத்தை கண் டித்தும், உடனடியாக ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கக்கோரியும் மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலா ளர் சி.பத்மநாபன் தலைமையில்  மருத்துவ மனை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஆம்பு லன்சை ஏற்பாடு செய்து உடலை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் கூறுகையில், இவ்வளவு பெரிய மருத்துவ மனையில் ஒரே ஒரு ஆம்புலன்சை மட்டும் வைத்து சமாளித்து வருகின்றனர். உறவுகளை இழந்த குடும்பத்தார், மணிக் கணக்கில் காத்திருப்பதன் அவதியை கொஞ் சமும் உணராத நிலையிலேயே மருத்துவ மனை நிர்வாகம் உள்ளது. தேவைக்கேற்ப  ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்பாடு செய்ய வேண் டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது, என்றனர்.