districts

கந்துவட்டி கொடுமையில் சுகாதார பணியாளர் தற்கொலை:

திருப்பூர், மே 24 - அவிநாசி பேரூராட்சியில் கொசுப்புழு ஒழிப்புப் பிரிவில் பணியாற்றி வந்த ச.பரிமளா என்பவர் கந்து வட்டி மற்றும் சாதிய வன்கொடுமை காரணமாக தற் கொலை செய்துகொண்டார். இவ ரது மரணத்துக்கு காரணமான வர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்ட குடும் பத்தாருக்கு உரிய இழப்பீடு, அரசு வேலைவழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், அவி நாசி பேரூராட்சி கைகாட்டி அரு கில் ராயம்பாளையம் பகுதியில் வசித்து வரும் அருந்ததிய சமூ கத்தைச் சேர்ந்தவர் பி.சந்திரன். இவரின் மனைவி ச.பரிமளா(32), அவினாசி பேரூராட்சியில் கொசுப் புழு ஒழிப்புப் பிரிவில்தற்காலிகப் பணியாளராக ஏழு ஆண்டுகளா கப் பணியாற்றி வந்தார்.இவரது கணவர் சந்திரன் பனியன் கம்பெ னியில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். இவர்க ளுக்கு சுதேசி (வயது 14) என்ற மகனும், தேவதர்ஷினி (12) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் முறையே 9ஆம் வகுப்பு, 7ஆம் வகுப்பு படித்துவருகின்றனர். இந்நிலையில், தமது குடும்ப வறுமை காரணமாக அதே பகுதி யில் வசித்து வரும் தனசேகரிடம் பரிமளா ரூ.27 ஆயிரம் கடன் வாங்கியிருக்கிறார். இதற்கு வாரத்திற்கு 10 சதவிகித வட்டி என்ற அடிப்படையில் கந்து வட்டி  செலுத்தி உள்ளார். இதில் ரூ.10 ஆயிரம் வரை கடன் செலுத்தி இருக்கிறார். இந்நிலையில், மே 23 அன்று  இரவு சுமார் 8 மணி அளவில் பரி மளாவும், மகள் திவ்யதர்ஷினியும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். கந்துவட்டி தனசேகரனும், அவரது தாயார் பூவாத்தாளும், பரிமளா வீட்டுக்கு வந்து, அவரை வெளியே வரச்சொல்லி, எல்லோ ரும்பார்த்துக் கொண்டிருக்கை யில், மீதித் தொகை ரூ. 17 ஆயிரத் தைக் கேட்டுசாதியைச் சொல்லி யும், பெண் குழந்தை குறித்து மிக மோசமான, இழிவான பாலியல் குறித்த வார்த்தைகளால் திட்டி, கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர்.

இதைத்தாங்கிக் கொள்ள முடி யாத பரிமளா, தனது மகளை,  அண்ணனை கூட்டி வா என அனுப்பி விட்டு, வீட்டுக்குள் சென்று, சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள் ளார். அருகில் இருந்தவர்கள் பதறி ஓடி வந்து காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் பரிம ளாவைக் காப்பாற்ற முடிய வில்லை. ரூ.17 ஆயிரம் பணத் திற்காக அநியாயமாக ஓர் இளம் பெண்ணின் உயிர் பறிபோயுள் ளது. அவர்களது குடும்பம் தற் போது, நிர்க்கதியாக நிற்கிறது. பட்டியல் சமூக மக்கள் மீது சாதி யத் தீண்டாமை ஒரு பக்கமும், அவர்களின் உழைப்பை ஒட்டச்  சுரண்டும் கந்துவட்டிக் கொடுமை ஒரு பக்கமும் என மிகக் கொடூர மானவன் கொடுமை கடுமையாக கண்டிக்கிறோம்.  தொடரும் சாதிய ஒடுக்கு முறைகளையும், கந்துவட்டிக் கொடுமைகளையும் உடனடியா கத் தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தமிழக அரசு கந்துவட்டி தொழில் நடத்தும் தனசேகரனை யும், அவனது தாய்பூவாத்தாளை யும் உடனடியாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திலும், கந்துவட் டித் தடைச் சட்டத்திலும் கைது  செய்ய வேண்டும், முதல் தகவல் அறிக்கையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கந்துவட்டி தடைச் சட்டப்பிரிவுகளின் படி  முறையாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இறந்து போன பரிமளா வின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். பேரூராட்சி சுகாதார முன் களப் பணியாள ரான பரிமளாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கேட்டுக்கொள்வதாக வும் செ.முத்துக்கண்ணன் கூறி யுள்ளார்.