அவிநாசி, ஜூலை 27- திருமுருகன் பூண்டியில் சாக்கடை கால்வாய், சாலை வசதி, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப் படை வசதிகளை செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் சனியன்று நகராட்சி ஆணையாளரி டம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருமுருகன் பூண்டி நகராட்சி ஆணையாளரிடம் சனியன்று அளிக்கப் பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, திருமுருகன்பூண்டி நகராட்சி 22 ஆவது வார்டு பகுதி ரிதன் அவென்யூ பகுதி யில் கழிவுநீர் வெளியேறுவதற்கான டிஸ்போசல் பாயிண்ட் இல்லாததால், அனைத்து வீடுகளின் கழிவு நீரையும் நில தொட்டியில் தேக்கி மீண்டும் அதை பம்பு செட்டு மூலம் அடுத்த வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கொண்டு விட வேண்டிய சூழல் நிலவுகிறது. கழி வுநீர் என்பதால் மோட்டார் பம்ப் செட் அடிக்கடி பழுதடைந்து நீரை வெளி யேற்ற முடியாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுகிறது. எனவே சாக்கடை கால் வாய் மாற்றி அமைத்து, அடுத்த தெரு வில் உள்ள கால்வாயோடு இணைப்ப தற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், திருநீலகண்டர் வீதி உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி, சாலையை விரிவுப டுத்தி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பூண்டி சிக்னலில் இருந்து நல்லாற்று பாலம் வரை தேசிய நெடுஞ் சாலையில் உள்ள வடிகால் முழுவதும் பழுதடைந்து விட்டது. இந்த கால் வாயை புதுப்பித்து தர வேண்டும். 22 ஆவது வார்டு அகில்நகர் குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டி முடித்து முழுமை பெறாமல் உள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு உண் டான உபகரணங்களை பொருத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பூண்டி பகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகி றது. இதை முறைபடுத்தி வாரம் ஒரு முறை வழங்க ஏற்பாடு செய்ய வேண் டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில்ம், திருமுருகன் பூண்டி நகராட்சி 10 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பி.சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றியக் குழு உறுப்பினர் ஆர்.பாலசுப்ர மணியம், எஸ்.காமராஜ், அருணாச லம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.