திருப்பூர், செப்.11- திருப்பூர் மாநகராட்சி முதலாம் மண் டலத்துக்கு உட்பட்ட பகுதியில், சாலை, மின்விளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பா ளையம் நகரக்குழு சார்பில் திங்களன்று முதலாம் மண்டல உதவி செயற்பொறி யாளர் பாபுவிடம் அளிக்கப்பட்ட மனு வில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாந கராட்சியின் முதலாம் மண்டலத்துக்கு உட்பட்ட 25 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகளை நிறை வேற்ற வலியுறுத்தி மனு அளித்தனர். குறிப்பாக, அணைப்பாளையம் பகுதி யில் சீரான இடைவெளியில் குப்பைத் தொட்டிகள் வைத்து குப்பைகளை அகற்ற வேண்டும். தரமான தார் சாலை களாக அமைத்துத் தர வேண்டும். கழிவு நீர் வெளியேற சாக்கடை கால்வாய் கள் கட்டித்தர வேண்டும். தெருவிளக்கு கள் அமைத்து தர வேண்டும். இரண்டு ஆண்டுகளாக நீடித்துவரும் குடிநீர் பிரச் சனைக்குத் தீர்வு காண வேண்டும் என மனு அளித்தனர். இப்பிரச்சனை குறித்து மாநகராட்சி மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைவரையும் நேரில் சந்திப்பது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் முடிவு செய்துள்ள னர். இதில், வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நகரக் குழு உறுப்பினர் வி.லட்சுமி, கிளைச் செயலா ளர்கள் ப.செல்வி, எஸ்.செல்வகுமார் மற்றும் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.