உடுமலை, ஆக.22- பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை நகராட்சி நிர்வாகம் தற்போது அடைத்துள்ளது இதை உடனடியாக திறக்க வேண்டும். என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உடு மலை மத்திய பேருந்து நிலையம் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்த வி.பி புரம் குடியிருப்பு பகுதியை பல ஆண்டுகளுக்கு முன்பு அகற்றி, தற்போது புதிய பேருந்து நிலைய கட்டிடங்கள் கட்டப்பட் டது. இதன் அருகே உள்ள ராமலிங்கம் லே-அவுட் தனியார் வணிக நிறுவனங்கள் மருத்துவமனைகள் உள்ளிட்டவைக ளுக்கு சென்று வர பொதுமக்கள் இதன் அருகே இருந்த பாதையை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தப் பேருந்து நிலையத்திற்கு சுற்று சுவர் கட்டு வதாக கூறி உடுமலை நகராட்சி நிர்வாகத்தினர் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைத்து பணிகளை மேற் கொண்டனர். அப்போதே பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பாதையை விட்டுவிட்டு கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இருப்பினும் பாதை அடைக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பாதை விட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.