பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப்பெறக்கோரி ஒன்றிய பா,ஜ,க அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கிணத்துக்கடவு பகத்சிங் திடலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளின் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெறக்கோரியும், சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப்பெறவும், வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதித்ததைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்திடவும், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை குறைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிணத்துக்கடவு சிபிஎம் நகர கிளை செயலாளர் எம்.மருதாச்சலம் தலைமை வகித்தார்.
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசித்தூர் கிளை செயலாளர் பி.ஆனந்தராஜ் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து உரையாற்றினார்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி மற்றும் பொள்ளாச்சி தாலுகா சிபிஎம் செயலாளர் மூ.அன்பரசன், தாலுகா குழு உறுப்பினர்கள் கே.மகாலிங்கம், என்.அமிர்தம், தமுஎகச பொறுப்பாளர் எம்.ஜென்னீஸ், ரேவதி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
முடிவில் கிணத்துக்கடவு சிபிஎம் நகர கிளை பொறுப்பாளர் ஜி.மணிகண்டன் நன்றி கூறினார். இதில் திராளானோர் கலந்துக் கொண்டனர்.