districts

img

உடுமலையில் சாலையை விரிவுபடுத்தி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

உடுமலை, ஜூன் 20- உடுமலை தளி சாலையில் ரயில்வே மேம் பாலம் மேற்குப்பகுதி சர்வீஸ் சாலையை விரி வுபடுத்தி உயிரிழப்பு விபத்துகள் நிகழ்வ தைத் தடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி  வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் உடுமலை நகராட்சி ஆணையாளர் மற் றும் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியா ளரிடம் வியாழனன்று அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, உடுமலை நகரின் பிரதான  சாலையாகவும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் தளி சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இச்சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் கிழக்கு பகுதியில் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. கிழக்கு பகுதியில் நன்கு  விரிந்த சர்வீஸ் சாலை உள்ளது. இந்த பாலத் தின் மேற்கு பகுதியில் சர்வீஸ் சாலை இல்லா ததால், அப்பகுதி மக்கள், வர்த்தக நிறுவனங் களுக்கு வந்து செல்வோர் குறுகிய சாலை யின் வழியாக வந்து பிரதான சாலையை அடைகின்றனர்.  இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.  இதுவரை 10க்கும் மேற்பட்ட மனித உயிரிழப் புகள் ஏற்பட்டுள்ளன. எனவே நெடுஞ்சா லைத் துறை உடனடியாக தலையிட்டு சாலை யின் மேற்குப்புறம் விசாலமான சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். எச்சரிக்கை பலகை வைத்து உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளை அனுமதித்திடுக! மேலும், உடுமலை நகர திருப்பூர் சாலை யில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லா மல் ஏழை எளிய மக்கள் சிறு வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நெடுஞ் சாலைத் துறை ஊழியர்கள் இவர்களின் கடை கள் ஆக்கிரமிப்பில் உள்ளது என கூறி, கடை களை அப்புறப்படுத்தி உள்ளனர். இதனால்  இந்த மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக் கின்றனர். சாலையோர வியாபாரிகள் முறைப்படுத்துதல் சட்டத்தில் உச்சநீதி மன்றம் சாலையோரம் வியாபாரம் செய்து  கொள்ள வழிவகை செய்து கொடுத்துள்ளது.  எனவே சாலையோர வியாபாரிகளின் வாழ் வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மீண் டும் சாலையோரம் கடை நடத்திட அனுமதிக்க  வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதி காரிக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. மரங்களை பிடுங்கியோர் மீது நடவடிக்கை இதையடுத்து உடுமலை நகராட்சி ஆணையாளரிடம் அளித்த மனுவில் கூறியுள் ளதாவது, உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஐஸ்வர்யா நகர் மனைப்பிரிவில்,  க.ச.எண்:124/-1ஏ, 112/ஏ3 உடுமலைப் பேட்டை கிராமம் நகரளவு வார்டு எண்: பி பிளாக் எண்: 24 நகரளவு எண்:24 பாகம் 7.8 சென்ட் கிப்ட் டீடு எண்.1546/1989 என விபரங் கள் குறிப்பிட்டு ஆணையாளர் உடுமலைப் பேட்டை நகராட்சி என்று அறிவிப்பு பலகை  வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பொது மக்கள் வேம்பு, புங்கன், கொடிக்காய் ஆகிய  மரக்கன்றுகளை நட்டு வைத்திருந்தனர். செவ் வாயன்று மதியம் 1 மணியளவில் உடுமலைப் பேட்டையில் சமூக ஆர்வலர் என்று சொல்லிக்  கொள்ளும் தனிநபர் இந்த இடம் தனக்கு சொந்தமானது எனக்கூறி, இயந்திரம் மூலம் இந்த இடத்தில் இருந்த மரக்கன்றுகளை பிடுங்கி நகராட்சி வைத்துள்ள போர்டுக்கு அருகில் இது தனியார் இடம் என்று குறிப் பிட்டு போர்டு வைத்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களுக்கு இந்த  இடம் நகராட்சிக்கு சொந்தமானதா அல்லது  தனியாருக்கு சொந்தமானதா என தெரியா மல் உள்ளனர். எனவே இந்த இடத்தை ஆய்வு  செய்ய வேண்டும். இது நகராட்சிக்கு பாத்தி யப்பட்ட இடம் எனில் பசுமையான மரங்களை  வேரோடு பிடுங்கி எறிந்து போர்டு வைத்த தனி யார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். தனியார் இடம் என்றால், எந்த வகையில்  தனியாருக்கு பாத்தியப்பட்டது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்  என கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரசெயலாளர் தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், நக ரக்குழு உறுப்பினர் வசந்தி, தோழன்ராஜா, ஜஹாங்கீர் மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.